Monday, May 30, 2016



கண்ணை நம்பாதே
உன்னை ஏமாற்றும் உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம்
உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு
உள்ளம் தெளிவாகும் அடையாளம் காட்டும்
பொய்யே சொல்லாதது

காவலரே வேஷமிட்டால் கள்வர்களும்
வேறுருவில் கண் முன்னே தோணுவது சாத்தியமே
காத்திருந்து கள்வனுக்கு கைவிலங்கு பூட்டிவிடும் கண்ணுக்கு தோணாத சத்தியமே
போடும் பொய்த்திரையை கிழித்து விடும் காலம்
புரியும் அப்போது மெய்யான கோலம் (கண்ணை)

ஓம் முருகா என்று சொல்லி உச்சரிக்கும் சாமிகளே
ருத்திராட்ச பூனைகளாய் வாழுரீங்க
சீமான்கள் போர்வையிலே சாமான்ய மக்களையே
ஏமாத்தி கொண்டாட்டம் போடூறீங்க
பொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை
உண்மை எப்போதும்தூங்குவதும் இல்லை (கண்ணை)

பொன் பொருளை கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டு
கண் மூடி போகிறவர் போகட்டுமே
என் மனதை நான் அறிவேன்
என் உறவை நான் மறவேன்
எது ஆன போதிலும் ஆகட்டுமே
நன்றி மறவாத நல்ல மனம் போதும்
என்றும் அதுவே என் மூலதனம் ஆகும் (கண்ணை)

ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து 
ஓடம் போலே ஆடலாம் ஆடலாம் 
(ஒருவர் மீது )
ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு (2)
பாடல் நூறு பாடலாம் பாடலாம்
(ஒருவர் சொல்ல )

சொட்டுத் தேனைப்போல் சொல்லும் வார்த்தைகள் 
பட்டுப்பூவைப்போல் பார்க்கும் பார்வைகள் 
சொர்க்கம் தேடிச் செல்லட்டும் ஆசை எண்ணங்கள் 
அங்கெல்லாம் பொங்கட்டும் காதல் வெள்ளங்கள் 
(ஒருவர் மீது )

சொல்லித் தாருங்கள் ...பள்ளிப் பாடங்கள் 
இன்னும் என்னென்ன மன்னன் லீலைகள் 
தங்கப் பாவை அங்கங்கள் உங்கள் சொந்தங்கள் 
தத்தை போல் மெத்தை மேல் ஏந்திக் கொள்ளுங்கள் 
(ஒருவர் சொல்ல )

கட்டுக்காவல்கள் விட்டுச் செல்லட்டும் 
கன்னிப் பெண் என்னை பின்னிக் கொள்ளட்டும் 
மையல் பாதி என்னோடு மீதம் உன்னோடு (2)
மஞ்சத்தில் கொஞ்சத்தான் போதை கொண்டாடு 

ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து 
ஓடம் போலே ஆடலாம் ஆடலாம் ....

No comments:

Post a Comment