| 1. அறத்துப்பால் | |
| 1.1 பாயிரவியல் | |
| 1.1.1 கடவுள் வாழ்த்து | |
| 1 | அகர முதல எழுத்தெல்லாம் ஆதி |
| பகவன் முதற்றே உலகு. | |
| 2 | கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் |
| நற்றாள் தொழாஅர் எனின். | |
| 3 | மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் |
| நிலமிசை நீடுவாழ் வார். | |
| 4 | வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு |
| யாண்டும் இடும்பை இல. | |
| 5 | இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் |
| பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. | |
| 6 | பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க |
| நெறிநின்றார் நீடுவாழ் வார். | |
| 7 | தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் |
| மனக்கவலை மாற்றல் அரிது. | |
| 8 | அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் |
| பிறவாழி நீந்தல் அரிது. | |
| 9 | கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான் |
| தாளை வணங்காத் தலை. | |
| 10 | பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் |
| இறைவன் அடிசேரா தார். | |
| 1.1.2 வான்சிறப்பு | |
| 11 | வான்நின்று உலகம் வழங்கி வருதலால் |
| தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. | |
| 12 | துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் |
| துப்பாய தூஉம் மழை. | |
| 13 | விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து |
| உள்நின்று உடற்றும் பசி. | |
| 14 | ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும் |
| வாரி வளங்குன்றிக் கால். | |
| 15 | கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே |
| எடுப்பதூஉம் எல்லாம் மழை. | |
| 16 | விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே |
| பசும்புல் தலைகாண்பு அரிது. | |
| 17 | நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி |
| தான்நல்கா தாகி விடின். | |
| 18 | சிறப்பொடு பூசனை செல்லாது வானம் |
| வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு. | |
| 19 | தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம் |
| வானம் வழங்கா தெனின். | |
| 20 | நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் |
| வான்இன்று அமையாது ஒழுக்கு. | |
| 1.1.3. நீத்தார் பெருமை | |
| 21 | ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து |
| வேண்டும் பனுவல் துணிவு. | |
| 22 | துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து |
| இறந்தாரை எண்ணிக்கொண் டற்று. | |
| 23 | இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் |
| பெருமை பிறங்கிற்று உலகு. | |
| 24 | உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் |
| வரனென்னும் வைப்பிற்கோர் வித்து. | |
| 25 | ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் |
| இந்திரனே சாலுங் கரி. | |
| 26 | செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் |
| செயற்கரிய செய்கலா தார். | |
| 27 | சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின் |
| வகைதெரிவான் கட்டே உலகு. | |
| 28 | நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து |
| மறைமொழி காட்டி விடும். | |
| 29 | குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி |
| கணமேயும் காத்தல் அரிது. | |
| 30 | அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர் க்கும் |
| செந்தண்மை பூண்டொழுக லான். | |
| 1.1.4. அறன்வலியுறுத்தல் | |
| 31 | சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு |
| ஆக்கம் எவனோ உயிர்க்கு. | |
| 32 | அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை |
| மறத்தலின் ஊங்கில்லை கேடு. | |
| 33 | ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே |
| செல்லும்வாய் எல்லாஞ் செயல். | |
| 34 | மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன் |
| ஆகுல நீர பிற. | |
| 35 | அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் |
| இழுக்கா இயன்றது அறம். | |
| 36 | அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது |
| பொன்றுங்கால் பொன்றாத் துணை. | |
| 37 | அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை |
| பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை. | |
| 38 | வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் |
| வாழ்நாள் வழியடைக்கும் கல். | |
| 39 | அறத்தான் வருவதே இன்பம் மற் றெல்லாம் |
| புறத்த புகழும் இல. | |
| 40 | செயற்பால தோரும் அறனே ஒருவற்கு |
| உயற்பால தோரும் பழி. | |
| 1.2. இல்லறவியல் | |
| 1.2.1. இல்வாழ்க்கை | |
| 41 | இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் |
| நல்லாற்றின் நின்ற துணை. | |
| 42 | துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும் |
| இல்வாழ்வான் என்பான் துணை. | |
| 43 | தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு |
| ஐம்புலத்தாறு ஓம்பல் தலை. | |
| 44 | பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை |
| வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல். | |
| 45 | அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை |
| பண்பும் பயனும் அது. | |
| 46 | அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில் |
| போஒய்ப் பெறுவ தெவன்? | |
| 47 | இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் |
| முயல்வாருள் எல்லாம் தலை. | |
| 48 | ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ் க்கை |
| நோற்பாரின் நோன்மை உடைத்து. | |
| 49 | அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் |
| பிறன்பழிப்ப தில்லாயின் நன்று. | |
| 50 | வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும் |
| தெய்வத்துள் வைக்கப் படும். | |
| 1.2.2 வாழ்க்கைத் துணைநலம் | |
| 51 | மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் |
| வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. | |
| 52 | மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை |
| எனைமாட்சித் தாயினும் இல். | |
| 53 | இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் |
| இல்லவள் மாணாக் கடை? | |
| 54 | பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும் |
| திண்மைஉண் டாகப் பெறின். | |
| 55 | தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் |
| பெய்யெனப் பெய்யும் மழை. | |
| 56 | தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற |
| சொற்காத்துச் சோர்விலாள் பெண். | |
| 57 | சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் |
| நிறைகாக்கும் காப்பே தலை. | |
| 58 | பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் |
| புத்தேளிர் வாழும் உலகு. | |
| 59 | புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன் |
| ஏறுபோல் பீடு நடை. | |
| 60 | மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன் |
| நன்கலம் நன்மக்கட் பேறு. | |
| 1.2.3 புதல்வரைப் பெறுதல் | |
| 61 | பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த |
| மக்கட்பேறு அல்ல பிற. | |
| 62 | எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் |
| பண்புடை மக்கட் பெறின். | |
| 63 | தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் |
| தம்தம் வினையான் வரும். | |
| 64 | அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் |
| சிறுகை அளாவிய கூழ். | |
| 65 | மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்று அவர் |
| சொற்கேட்டல் இன்பம் செவிக்கு. | |
| 66 | குழல் இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் |
| மழலைச்சொல் கேளா தவர். | |
| 67 | தந்தை மகற்காற்று நன்றி அவையத்து |
| முந்தி இருப்பச் செயல். | |
| 68 | தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து |
| மன்னுயிர்க் கெல்லாம் இனிது. | |
| 69 | ஈன்ற பொழுதின் பெரிதவக்கும் தன்மகனைச் |
| சான்றோன் எனக்கேட்ட தாய். | |
| 70 | மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை |
| என்நோற்றான் கொல் எனும் சொல். | |
| 1.2.4 அன்புடைமை | |
| 71 | அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் |
| புன்கணீர் பூசல் தரும். | |
| 71 | அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் |
| என்பும் உரியர் பிறர்க்கு. | |
| 73 | அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு |
| என்போடு இயைந்த தொடர்பு. | |
| 74 | அன்பு ஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும் |
| நண்பு என்னும் நாடாச் சிறப்பு. | |
| 75 | அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து |
| இன்புற்றார் எய்தும் சிறப்பு. | |
| 76 | அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் |
| மறத்திற்கும் அஃதே துணை. | |
| 77 | என்பி லதனை வெயில்போலக் காயுமே |
| அன்பி லதனை அறம். | |
| 78 | அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் |
| வற்றல் மரந்தளிர்த் தற்று. | |
| 79 | புறத்துறுப் பெல்லாம் எவன்செய்பு ம் யாக்கை |
| அகத்துறுப்பு அன்பி லவர்க்கு. | |
| 80 | அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு |
| என்புதோல் போர்த்த உடம்பு. | |
| 1.2.5. விருந்தோம்பல் | |
| 81 | இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி |
| வேளாண்மை செய்தற் பொருட்டு. | |
| 82 | விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா |
| மருந்தெனினும் வேண் டற்பாற் றன்று. | |
| 83 | வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை |
| பருவந்து பாழ்படுதல் இன்று. | |
| 84 | அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து |
| நல்விருந்து ஓம்புவான் இல். | |
| 85 | வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி |
| மிச்சில் மிசைவான் புலம். | |
| 86 | செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் |
| நல்வருந்து வானத் தவர்க்கு. | |
| 87 | இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின் |
| துணைத்துணை வேள்விப் பயன். | |
| 88 | பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி |
| வேள்வி தலைப்படா தார். | |
| 89 | உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா |
| மடமை மடவார்கண் உண்டு. | |
| 90 | மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து |
| நோக்கக் குநழ்யும் விருந்து. | |
| 1.2.6 இனியவைகூறல் | |
| 91 | இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் |
| செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். | |
| 92 | அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து |
| இன்சொலன் ஆகப் பெறின். | |
| 93 | முகத்தான் அமர்ந் துஇனிது நோக்கி அகத்தானாம் |
| இன்சொ லினதே அறம். | |
| 94 | துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் |
| இன்புறூஉம் இன்சொ லவர்க்கு. | |
| 95 | பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு |
| அணியல்ல மற்றுப் பிற. | |
| 96 | அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை |
| நாடி இனிய சொலின் | |
| 97 | நயன் ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று |
| பண்பின் தலைப்பிரியாச் சொல். | |
| 98 | சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும் |
| இம்மையும் இன்பம் தரும். | |
| 99 | இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ |
| வன்சொல் வழங்கு வது? | |
| 100 | இனிய உளவாக இன்னாத கூறல் |
| கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று. | |
| 1.2.7 செய்ந்நன்றி அறிதல் | |
| 101 | செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் |
| வானகமும் ஆற்றல் அரிது. | |
| 102 | காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் |
| ஞாலத்தின் மாணப் பெரிது. | |
| 103 | பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் |
| நன்மை கடலின் பெரிது. | |
| 104 | தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் |
| கொள்வர் பயன்தெரி வார். | |
| 105 | உதவி வரைத்தன்று உதவி உதவி |
| செயப்பட்டார் சால்பின் வரைத்து. | |
| 106 | மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க |
| துன்பத்துள் துப்பாயார் நட்பு. | |
| 107 | எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண் |
| விழுமந் துடைத்தவர் நட்பு. | |
| 108 | நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது |
| அன்றே மறப்பது நன்று. | |
| 109 | கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த |
| ஒன்றுநன்று உள்ளக் கெடும். | |
| 110 | எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை |
| செய்ந்நன்றி கொன்ற மகற்கு. | |
| 1.2.8 நடுவு நிலைமை | |
| 111 | தகுதி எனவொன்று நன்றே பகுதியால் |
| பாற்பட்டு ஒழுகப் பெறின். | |
| 112 | செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி |
| எச்சத்திற் கேமாப்பு உடைத்து. | |
| 113 | நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை |
| அன்றே யொழிய விடல். | |
| 114 | தக்கார் தகவிலர் என்பது அவரவர் |
| எச்சத்தாற் காணப்ப படும். | |
| 115 | கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக் |
| கோடாமை சான்றோர்க் கணி. | |
| 116 | கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம் |
| நடுவொரீஇ அல்ல செயின். | |
| 117 | கெடுவாக வையாது உலகம் நடுவாக |
| நன்றிக்கண் தங்கியான் தாழ்வு. | |
| 118 | சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால் |
| கோடாமை சான்றோர்க் கணி. | |
| 119 | சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா |
| உட்கோட்டம் இன்மை பெறின். | |
| 120 | வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் |
| பிறவும் தமபோல் செயின். | |
| 1.2.9. அடக்கமுடைமை | |
| 121 | அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை |
| ஆரிருள் உய்த்து விடும். | |
| 122 | காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் |
| அதனினூஉங் கில்லை உயிர்க்கு. | |
| 123 | செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து |
| ஆற்றின் அடங்கப் பெறின். | |
| 124 | நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் |
| மலையினும் மாணப் பெரிது. | |
| 125 | எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் |
| செல்வர்க்கே செல்வம் தகைத்து. | |
| 126 | ஒருநம்யுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் |
| எழுநம்யும் ஏமாப் புடைத்து. | |
| 127 | யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் |
| சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. | |
| 128 | ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின் |
| நன்றாகா தாகி விடும். | |
| 129 | தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே |
| நாவினாற் சுட்ட வடு. | |
| 130 | கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி |
| அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து. | |
| 1.2.10. ஒழுக்கமுடைமை | |
| 131 | ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் |
| உயிரினும் ஓம்பப் படும். | |
| 132 | பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித் |
| தேரினும் அஃதே துணை. | |
| 133 | ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம் |
| இழிந்த பிறப்பாய் விடும். | |
| 134 | மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான் |
| பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். | |
| 135 | அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை |
| ஒழுக்க மிலான்கண் உயர்வு. | |
| 136 | ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின் |
| ஏதம் படுபாக் கறிந்து. | |
| 137 | ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் |
| எய்துவர் எய்தாப் பழி. | |
| 138 | நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் |
| என்றும் இடும்பை தரும். | |
| 139 | ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய |
| வழுக்கியும் வாயாற் சொலல். | |
| 140 | உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் |
| கல்லார் அறிவிலா தார் | |
| 1.2.11. பிறனில் விழையாமை | |
| 141 | பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து |
| அறம்பொருள் கண்டார்கண் இல். | |
| 142 | அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை |
| நின்றாரின் பேதையார் இல். | |
| 143 | விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில் |
| தீமை புரிந்து ஒழுகு வார். | |
| 144 | எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும் |
| தேரான் பிறனில் புகல். | |
| 145 | எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும் |
| விளியாது நிற்கும் பழி. | |
| 146 | பகைபாவம் அச்சம் பழியென நான்கும் |
| இகவாவாம் இல்லிறப்பான் கண். | |
| 147 | அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள் |
| பெண்மை நயவா தவன். | |
| 148 | பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு |
| அறனொன்றோ ஆன்ற வொழுக்கு. | |
| 149 | நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின் |
| பிறர்க்குரியாள் தோள்தோயா தார். | |
| 150 | அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள் |
| பெண்மை நயவாமை நன்று. | |
| 1.2.12. பொறையுடைமை | |
| 151 | அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை |
| இகழ்வார்ப் பொறுத்தல் தலை. | |
| 152 | பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை |
| மறத்தல் அதனினும் நன்று. | |
| 153 | இன்நம்யுள் இன்மை விருந்தொரால் வன்மையுள் |
| வன்மை மடவார்ப் பொறை. | |
| 154 | நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமை |
| போற்றி யொழுகப் படும். | |
| 155 | ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர் |
| பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து. | |
| 156 | ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப் |
| பொன்றுந் துணையும் புகழ். | |
| 157 | திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து |
| அறனல்ல செய்யாமை நன்று. | |
| 158 | மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம் |
| தகுதியான் வென்று விடல். | |
| 159 | துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய் |
| இன்னாச்சொல் நோற்கிற் பவர். | |
| 160 | உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும் |
| இன்னாச்சொல் நோற்பாரின் பின். | |
| 1.2.13 அழுக்காறாமை | |
| 161 | ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து |
| அழுக்காறு இலாத இயல்பு. | |
| 162 | விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும் |
| அழுக்காற்றின் அன்மை பெறின். | |
| 163 | அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம் |
| பேணாது அழுக்கறுப் பான். | |
| 164 | அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின் |
| ஏதம் படுபாக்கு அறிந்து. | |
| 165 | அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார் |
| வழுக்காயும் கேடீன் பது. | |
| 166 | கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் |
| உண்பதூஉம் இன்றிக் கெடும். | |
| 167 | அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள் |
| தவ்வையைக் காட்டி விடும். | |
| 168 | அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத் |
| தீயுழி உய்த்து விடும். | |
| 169 | அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் |
| கேடும் நினைக்கப் படும். | |
| 170 | அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார் |
| பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல். | |
| 1.2.14. வெஃகாமை | |
| 171 | நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக் |
| குற்றமும் ஆங்கே தரும். | |
| 172 | படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் |
| நடுவன்மை நாணு பவர். | |
| 173 | சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே |
| மற்றின்பம் வேண்டு பவர். | |
| 174 | இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற |
| புன்மையில் காட்சி யவர். | |
| 175 | அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும் |
| வெஃகி வெறிய செயின். | |
| 176 | அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப் |
| பொல்லாத சூழக் கெடும். | |
| 177 | வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின் |
| மாண்டற் கரிதாம் பயன். | |
| 178 | அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை |
| வேண்டும் பிறன்கைப் பொருள். | |
| 179 | அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும் |
| திறன்அறிந் தாங்கே திரு. | |
| 180 | இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும் |
| வேண்டாமை என்னுஞ் செருக்கு. | |
| 1.2.15. புறங்கூறாமை | |
| 181 | அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன் |
| புறங்கூறான் என்றல் இனிது. | |
| 182 | அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே |
| புறனழீஇப் பொய்த்து நகை. | |
| 183 | புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல் |
| அறங்கூற்றும் ஆக்கத் தரும். | |
| 184 | கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க |
| முன்னின்று பின்நோக்காச் சொல். | |
| 185 | அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும் |
| புன்மையாற் காணப் படும். | |
| 186 | பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும் |
| திறன்தெரிந்து கூறப் படும். | |
| 187 | பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி |
| நட்பாடல் தேற்றா தவர். | |
| 188 | துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார் |
| என்னைகொல் ஏதிலார் மாட்டு. | |
| 189 | அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப் |
| புன்சொல் உரைப்பான் பொறை. | |
| 190 | ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின் |
| தீதுண்டோ மன்னும் உயிர்க்கு. | |
| 1.2.16. பயனில சொல்லாமை | |
| 191 | பல்லார் முனியப் பயனில சொல்லுவான் |
| எல்லாரும் எள்ளப் படும். | |
| 192 | பயனில பல்லார்முன் சொல்லல் நயனில |
| நட்டார்கண் செய்தலிற் றீது. | |
| 193 | நயனிலன் என்பது சொல்லும் பயனில |
| பாரித் துரைக்கும் உரை. | |
| 194 | நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப் |
| பண்பில்சொல் பல்லா ரகத்து. | |
| 195 | சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில |
| நீர்மை யுடையார் சொலின். | |
| 196 | பயனில் சொல் பராட்டு வானை மகன்எனல் |
| மக்கட் பதடி யெனல். | |
| 197 | நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர் |
| பயனில சொல்லாமை நன்று. | |
| 198 | அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார் |
| பெரும்பயன் இல்லாத சொல். | |
| 199 | பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த |
| மாசறு காட்சி யவர். | |
| 200 | சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க |
| சொல்லிற் பயனிலாச் சொல். | |
| 1.2.17. தீவினையச்சம் | |
| 201 | தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் |
| தீவினை என்னும் செருக்கு. | |
| 202 | தீயவை தீய பயத்தலால் தீயவை |
| தீயினும் அஞ்சப் படும். | |
| 203 | அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய |
| செறுவார்க்கும் செய்யா விடல். | |
| 204 | மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் |
| அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு. | |
| 205 | இலன் என்று தீயவை செய்யற்க செய்யின் |
| இலனாகும் மற்றும் பெயர்த்து. | |
| 206 | தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால |
| தன்னை அடல்வேண்டா தான். | |
| 207 | எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை |
| வீயாது பின்சென்று அடும். | |
| 208 | தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை |
| வீயாது அஇஉறைந் தற்று. | |
| 209 | தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும் |
| துன்னற்க தீவினைப் பால். | |
| 210 | அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித் |
| தீவினை செய்யான் எனின். | |
| 1.2.18. ஒப்புரவறிதல் | |
| 211 | கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு |
| என் ஆற்றுங் கொல்லோ உலகு. | |
| 212 | தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு |
| வேளாண்மை செய்தற் பொருட்டு. | |
| 213 | புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே |
| ஒப்புரவின் நல்ல பிற. | |
| 214 | ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான் |
| செத்தாருள் வைக்கப் படும். | |
| 215 | ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் |
| பேரறி வாளன் திரு. | |
| 216 | பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம் |
| நயனுடை யான்கண் படின். | |
| 217 | மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம் |
| பெருந்தகை யான்கண் படின். | |
| 218 | இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார் |
| கடனறி காட்சி யவர். | |
| 219 | நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர |
| செய்யாது அமைகலா வாறு. | |
| 220 | ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன் |
| விற்றுக்கோள் தக்க துடைத்து. | |
| 1.2.19. ஈகை | |
| 221 | வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் |
| குறியெதிர்ப்பை நீர துடைத்து. | |
| 222 | நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம் |
| இல்லெனினும் ஈதலே நன்று. | |
| 223 | இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல் |
| குலனுடையான் கண்ணே யுள. | |
| 224 | இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர் |
| இன்முகங் காணும் அளவு. | |
| 225 | ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை |
| மாற்றுவார் ஆற்றலின் பின். | |
| 226 | அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் |
| பெற்றான் பொருள்வைப் புழி. | |
| 227 | பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும் |
| தீப்பிணி தீண்டல் அரிது. | |
| 228 | ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை |
| வைத்திழக்கும் வன்க ணவர். | |
| 229 | இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய |
| தாமே தமியர் உணல். | |
| 230 | சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம் |
| ஈதல் இயையாக் கடை. | |
| 1.2.20. புகழ் | |
| 231 | ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது |
| ஊதியம் இல்லை உயிர்க்கு. | |
| 232 | உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று |
| ஈவார்மேல் நிற்கும் புகழ். | |
| 233 | ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் |
| பொன்றாது நிற்பதொன் றில். | |
| 234 | நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப் |
| போற்றாது புத்தேள் உலகு. | |
| 235 | நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும் |
| வித்தகர்க் கல்லால் அரிது. | |
| 236 | தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் |
| தோன்றலின் தோன்றாமை நன்று. | |
| 237 | புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை |
| இகழ்வாரை நோவது எவன்? | |
| 238 | வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும் |
| எச்சம் பெறாஅ விடின். | |
| 239 | வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா |
| யாக்கை பொறுத்த நிலம். | |
| 240 | வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய |
| வாழ்வாரே வாழா தவர். | |
| 1.3 துறவறவியல் | |
| 1.3.1 அருளுடைமை | |
| 241 | அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் |
| பூரியார் கண்ணும் உள. | |
| 242 | நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால் |
| தேரினும் அஃதே துணை. | |
| 243 | அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த |
| இன்னா உலகம் புகல். | |
| 244 | மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப |
| தன்னுயிர் அஞ்சும் வினை. | |
| 245 | அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும் |
| மல்லன்மா ஞாலங் கரி. | |
| 246 | பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி |
| அல்லவை செய்தொழுகு வார். | |
| 247 | அருளில்ார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு |
| இவ்வுலகம் இல்லாகி யாங்கு. | |
| 248 | பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார் |
| அற்றார்மற் றாதல் அரிது. | |
| 249 | தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின் |
| அருளாதான் செய்யும் அறம். | |
| 250 | வலியார்முன் தன்னை நினைக்க தான் தன்னின் |
| மெலியார்மேல் செல்லு மிடத்து. | |
| 1.3.2. புலான்மறுத்தல் | |
| 251 | தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் |
| எங்ஙனம் ஆளும் அருள்? | |
| 252 | பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி |
| ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு. | |
| 253 | படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன் |
| உடல்சுவை உண்டார் மனம். | |
| 254 | ருளல்லது யாதெனின் கொல்லாமை கோறல் |
| பொருளல்லது அவ்வூன் தினல். | |
| 255 | உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண |
| அண்ணாத்தல் செய்யாது அளறு. | |
| 256 | தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும் |
| விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில். | |
| 257 | உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன் |
| புண்ணது உணர்வார்ப் பெறின். | |
| 258 | செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார் |
| உயிரின் தலைப்பிரிந்த ஊன். | |
| 259 | அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் |
| உயிர்செகுத் துண்ணாமை நன்று. | |
| 260 | கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி |
| எல்லா உயிருந் தொழும். | |
| 1.3.3 தவம் | |
| 261 | உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை |
| அற்றே தவத்திற் குரு. | |
| 262 | தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை |
| அஃதிலார் மேற்கொள் வது. | |
| 263 | துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் |
| மற்றை யவர்கள் தவம். | |
| 264 | ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும் |
| எண்ணின் தவத்தான் வரும். | |
| 265 | வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம் |
| ஈண்டு முயலப் படும். | |
| 266 | தவஞ் செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார் |
| அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு. | |
| 267 | சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ் |
| சுடச்சுட நோற்கிற் பவர்க்கு. | |
| 268 | தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய |
| மன்னுயி ரெல்லாந் தொழும். | |
| 269 | கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் |
| ஆற்றல் தலைப்பட் டவர்க்குல். | |
| 270 | இலர்பல ராகிய காரணம் நோற்பார் |
| சிலர்பலர் நோலா தவர். | |
| 1.3.4. கூடாவொழுக்கம் | |
| 271 | வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் |
| ஐந்தும் அகத்தே நகும். | |
| 272 | வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம் |
| தான்அறி குற்றப் படின். | |
| 273 | வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் |
| புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று. | |
| 274 | தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து |
| வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று. | |
| 275 | பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று |
| ஏதம் பலவுந் தரும். | |
| 276 | நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து |
| வாழ்வாரின் வன்கணார் இல். | |
| 277 | புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி |
| முக்கிற் கரியார் உடைத்து. | |
| 278 | மனத்தது மாசாக மாண்டார் நீராடி |
| மறைந்தொழுகு மாந்தர் பலர். | |
| 279 | கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன |
| வினைபடு பாலால் கொளல். | |
| 280 | மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் |
| பழித்தது ஒழித்து விடின். | |
| 1.3.5. கள்ளாமை | |
| 281 | எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும் |
| கள்ளாமை காக்கதன் நெஞ்சு. | |
| 282 | உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக் |
| கள்ளத்தால் கள்வேம் எனல். | |
| 283 | களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து |
| ஆவது போலக் கெடும். | |
| 284 | களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண் |
| வீயா விழுமம் தரும். | |
| 285 | அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப் |
| பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல். | |
| 286 | அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண் |
| கன்றிய காத லவர். | |
| 287 | களவென்னும் காரறி வாண்மை அளவென்னும் |
| ஆற்றல் புரிந்தார்கண்ட இல். | |
| 288 | அளவறந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும் |
| களவறிந்தார் நெஞ்சில் கரவு. | |
| 289 | அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல |
| மற்றைய தேற்றா தவர். | |
| 290 | கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத் |
| தள்ளாது புத்தே ளுளகு. | |
| 1.3.6. வாய்மை | |
| 291 | வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் |
| தீமை இலாத சொலல். | |
| 292 | பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த |
| நன்மை பயக்கும் எனின். | |
| 293 | தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் |
| தன்நெஞ்சே தன்னைச் சுடும். | |
| 294 | உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார் |
| உள்ளத்து ளெல்லாம் உளன். | |
| 295 | மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு |
| தானஞ்செய் வாரின் தலை. | |
| 296 | பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை |
| எல்லா அறமுந் தரும். | |
| 297 | பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற |
| செய்யாமை செய்யாமை நன்று. | |
| 298 | புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை |
| வாய்மையால் காணப் படும். | |
| 299 | எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் |
| பொய்யா விளக்கே விளக்கு. | |
| 300 | யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும் |
| வாய்மையின் நல்ல பிற. | |
| 1.3.7 வெகுளாமை | |
| 301 | செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக் |
| காக்கின்என் காவாக்கால் என்? | |
| 302 | செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும் |
| இல்அதனின் தீய பிற. | |
| 303 | மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய |
| பிறத்தல் அதனான் வரும். | |
| 304 | நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் |
| பகையும் உளவோ பிற. | |
| 305 | தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் |
| தன்னையே கொல்லுஞ் சினம். | |
| 306 | சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் |
| ஏமப் புணையைச் சுடும். | |
| 307 | சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு |
| நிலத்தறைந்தான் கைபிழையா தற்று. | |
| 308 | இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும் |
| புணரின் வெகுளாமை நன்று. | |
| 309 | உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால் |
| உள்ளான் வெகுளி எனின். | |
| 310 | இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத் |
| துறந்தார் துறந்தார் துணை. | |
| 1.3.8 இன்னாசெய்யாமை | |
| 311 | சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்கு இன்னா |
| செய்யாமை மாசற்றார் கோள். | |
| 312 | கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா |
| செய்யாமை மாசற்றார் கோள். | |
| 313 | செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின் |
| உய்யா விழுமந் தரும். | |
| 314 | இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண |
| நன்னயஞ் செய்து விடல். | |
| 315 | அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் |
| தந்நோய்போல் போற்றாக் கடை. | |
| 316 | இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை |
| வேண்டும் பிறன்கண் செயல். | |
| 317 | எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம் |
| மாணாசெய் யாமை தலை. | |
| 318 | தன்னுயிர்ககு ஏன்னாமை தானறிவான் என்கொலோ |
| மன்னுயிர்க்கு இன்னா செயல். | |
| 319 | பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா |
| பிற்பகல் தாமே வரும். | |
| 320 | நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார் |
| நோயின்மை வேண்டு பவர். | |
| 1.3.9 கொல்லாமை | |
| 321 | அறவினை யாதெனின் கொல்லாமை கோறல் |
| பிறவினை எல்லாந் தரும். | |
| 322 | பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் |
| தொகுத்தவற்றுள் எல்லாந் தலை. | |
| 323 | ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன் |
| பின்சாரப் பொய்யாமை நன்று. | |
| 324 | நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும் |
| கொல்லாமை சூழும் நெறி. | |
| 325 | நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக் |
| கொல்லாமை சூழ்வான் தலை. | |
| 326 | கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல் |
| செல்லாது உயிருண்ணுங் கூற்று. | |
| 327 | தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது |
| இன்னுயிர் நீக்கும் வினை. | |
| 328 | நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக் |
| கொன்றாகும் ஆக்கங் கடை. | |
| 329 | கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர் |
| புன்மை தெரிவா ரகத்து. | |
| 330 | உயிர் உடம்பின் நீக்கியார் என்ப செயிர் உடம்பின் |
| செல்லாத்தீ வாழ்க்கை யவர். | |
| 1.3.10 நிலையாமை | |
| 331 | நில்லாத வற்றை நிலையின என்றுணரும் |
| புல்லறி வாண்மை கடை. | |
| 332 | கூத்தாட்டு அவைக் குழாத் தற்றே பெருஞ்செல்வம் |
| போக்கும் அதுவிளிந் தற்று. | |
| 333 | அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால் |
| அ்குப ஆங்கே செயல். | |
| 334 | நாளென ஒன்றுபோற் காட்டி உயிர் ஈரும் |
| வாளது உணர்வார்ப் பெறின். | |
| 335 | நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை |
| மேற்சென்று செய்யப் படும் | |
| 336 | நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் |
| பெருமை உடைத்துஇவ் வுலகு. | |
| 337 | ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப |
| கோடியும் அல்ல பல. | |
| 338 | குடம்பை தனித்து ஒழியப் புள்பறந் தற்றே |
| உடம்பொடு உயிரிடை நட்பு. | |
| 339 | உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி |
| விழிப்பது போலும் பிறப்பு. | |
| 340 | புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள் |
| துச்சில் இருந்த உயிர்க்கு. | |
| 1.3.11 துறவு | |
| 341 | யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் |
| அதனின் அதனின் இலன். | |
| 342 | வேண்டின் உண் டாகத் துறக்க துறந்தபின் |
| ஈண்டுஇயற் பால பல. | |
| 343 | அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும் |
| வேண்டிய வெல்லாம் ஒருங்கு. | |
| 344 | இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை |
| மயலாகும் மற்றும் பெயர்த்து. | |
| 345 | மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல் |
| உற்றார்க்கு உடம்பும் மிகை. | |
| 346 | யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு |
| உயர்ந்த உலகம் புகும். | |
| 347 | பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப் |
| பற்றி விடாஅ தவர் க்கு. | |
| 348 | தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி |
| வலைப்பட்டார் மற்றை யவர். | |
| 349 | பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று |
| நிலையாமை காணப் படும். | |
| 350 | பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் |
| பற்றுக பற்று விடற்கு. | |
| 1.3.12 மெய்யுணர்தல் | |
| 351 | பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும் |
| மருளானாம் மாணாப் பிறப்பு. | |
| 352 | இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி |
| மாசறு காட்சி யவர்க்கு. | |
| 353 | ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் |
| வானம் நணிய துடைத்து. | |
| 354 | ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே |
| மெய்யுணர்வு இல்லா தவர்க்கு. | |
| 355 | எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் |
| மெய்ப்பொருள் காண்பது அறிவு. | |
| 356 | கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் |
| மற்றீண்டு வாரா நெறி. | |
| 357 | ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப் |
| பேர்த்துள்ள வேண்டா பிறப்பு. | |
| 358 | பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும் |
| செம்பொருள் காண்பது அறிவு. | |
| 359 | சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச் |
| சார்தரா சார்தரு நோய். | |
| 360 | காமம் வெகுளி மயக்கம் இவ்முன்றன் |
| நாமம் கெடக்கெடும் நோய். | |
| 1.3.13 அவாவறுத்தல் | |
| 361 | அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ் ஞான்றும் |
| தவாஅப் பிறப்பீனும் வித்து. | |
| 362 | வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது |
| வேண்டாமை வேண்ட வரும். | |
| 363 | வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை |
| ஆண்டும் அஃதொப்பது இல். | |
| 364 | தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது |
| வாஅய்மை வேண்ட வரும். | |
| 365 | அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார் |
| அற்றாக அற்றது இலர். | |
| 366 | அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை |
| வஞ்சிப்ப தோரும் அவா. | |
| 367 | அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை |
| தான்வேண்டு மாற்றான் வரும். | |
| 368 | அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல் |
| தவாஅது மேன்மேல் வரும். | |
| 369 | இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும் |
| துன்பத்துள் துன்பங் கெடின். | |
| 370 | ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே |
| பேரா இயற்கை தரும். | |
| 1.4 ஊழியல் | |
| 1.4.1. ஊழ் | |
| 371 | ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள் |
| போகூழால் தோன்றும் மடி. | |
| 372 | பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும் |
| ஆகலூழ் உற்றக் கடை. | |
| 373 | நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன் |
| உண்மை யறிவே மிகும். | |
| 374 | இருவேறு உலகத்து இயற்கை திருவேறு |
| தெள்ளிய ராதலும் வேறு. | |
| 375 | நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும் |
| நல்லவாம் செல்வம் செயற்கு. | |
| 376 | பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச் |
| சொரியினும் போகா தம. | |
| 377 | வகுத்தான் வகுத் வகையல்லால் கோடி |
| தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது. | |
| 378 | துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால |
| ஊட்டா கழியு மெனின். | |
| 379 | நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால் |
| அல்லற் படுவ தெவன்? | |
| 380 | ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று |
| சூழினுந் தான்முந் துறும். | |
| 2. பொருட்பால் | |
| 2.1 அரசியல் | |
| 2.1.1 இறைமாட்சி | |
| 381 | படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் |
| உடையான் அரசருள் ஏறு. | |
| 382 | அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் |
| எஞ்சாமை வேந்தர்க் கியல்பு. | |
| 383 | தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும் |
| நீங்கா நிலனான் பவர்க்கு. | |
| 384 | அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா |
| மானம் உடைய தரசு. | |
| 385 | இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த |
| வகுத்தலும் வல்ல தரசு. | |
| 386 | காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் |
| மீக்கூறும் மன்னன் நிலம் | |
| 387 | இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால் |
| தான்கண் டனைத்திவ் வுலகு. | |
| 388 | முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு |
| இறையென்று வைக்கப் படும். | |
| 389 | செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன் |
| கவிகைக்கீழ்த் தங்கும் உலகு. | |
| 390 | கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் |
| உடையானாம் வேந்தர்க் கொளி. | |
| 2.1.2 கல்வி | |
| 391 | கற்க கசடறக் கற்பவை கற்றபின் |
| நிற்க அதற்குத் தக. | |
| 392 | எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண் டும் |
| கண்ணென்ப வாழும் உயிர்க்கு. | |
| 393 | கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு |
| புண்ணுடையர் கல்லா தவர். | |
| 394 | உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் |
| அனைத்தே புலவர் தொழில். | |
| 395 | உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார் |
| கடையரே கல்லா தவர். | |
| 396 | தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் |
| கற்றனைத் தூறும் அறிவு. | |
| 397 | யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் |
| சாந்துணையுங் கல்லாத வாறு. | |
| 398 | ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு |
| எழுமையும் ஏமாப் புடைத்து. | |
| 399 | தாமின் புறுவது உலகின் புறக் கண்டு |
| காமுறுவர் கற்றறிந் தார். | |
| 400 | கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு |
| மாடல்ல மற்றை யவை. | |
| 2.1.3 கல்லாமை | |
| 401 | அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய |
| நூலின்றிக் கோட்டி கொளல். | |
| 402 | கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும் |
| இல்லாதாள் பெண்காமுற் றற்று. | |
| 403 | கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன் |
| சொல்லா திருக்கப் பெறின். | |
| 404 | கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும் |
| கொள்ளார் அறிவுடை யார். | |
| 405 | கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து |
| சொல்லாடச் சோர்வு படும். | |
| 406 | உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக் |
| களரனையர் கல்லா தவர். | |
| 407 | நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம் |
| மண்மாண் புனைபாவை யற்று. | |
| 408 | நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே |
| கல்லார்கண் பட் ட திரு. | |
| 409 | மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும் |
| கற்றார் அனைத்திலர் பாடு. | |
| 410 | விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் |
| கற்றாரோடு ஏனை யவர். | |
| 2.1.4 கேள்வி | |
| 411 | செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம் |
| செல்வத்து ளெல்லாந் தலை. | |
| 412 | செவுக்குண வில்லாத போழ்து சிறிது |
| வயிற்றுக்கும் ஈயப் படும். | |
| 413 | செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின் |
| ஆன்றாரோ டொப்பர் நிலத்து. | |
| 414 | கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு |
| ஒற்கத்தின் ஊற்றாந் துணை. | |
| 415 | இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே |
| ஒழுக்க முடையார்வாய்ச் சொல். | |
| 416 | எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் |
| ஆன்ற பெருமை தரும். | |
| 417 | பிழைத் துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந் |
| தீண்டிய கேள்வி யவர். | |
| 418 | கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால் |
| தோட்கப் படாத செவி. | |
| 419 | நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய |
| வாயின ராதல் அரிது. | |
| 420 | செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் |
| அவியினும் வாழினும் என்? | |
| 2.1.5 அறிவுடைமை | |
| 421 | அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் |
| உள்ளழிக்க லாகா அரண். | |
| 422 | சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ |
| நன்றின்பால் உய்ப்ப தறிவு. | |
| 423 | எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் |
| மெய்ப்பொருள் காண்ப தறிவு. | |
| 424 | எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் |
| நுண்பொருள் காண்ப தறிவு. | |
| 425 | உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும் |
| கூம்பலும் இல்ல தறிவு. | |
| 426 | எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு |
| அவ்வ துறைவ தறிவு. | |
| 427 | அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார் |
| அஃதறி கல்லா தவர். | |
| 428 | அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது |
| அஞ்சல் அறிவார் தொழில். | |
| 429 | எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை |
| அதிர வருவதோர் நோய். | |
| 430 | அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார் |
| என்னுடைய ரேனும் இலர். | |
| 2.1.6 குற்றங்கடிதல் | |
| 431 | செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார் |
| பெருக்கம் பெருமித நீர்த்து. | |
| 432 | இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா |
| உவகையும் ஏதம் இறைக்கு. | |
| 433 | தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக் |
| கொள்வர் பழிநாணு வார். | |
| 434 | குற்றமே காக்க பொருளாகக் குற்றமே |
| அற்றந் த்ரூஉம் பகை. | |
| 435 | வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் |
| வைத்தூறு போலக் கெடும். | |
| 436 | தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின் |
| என்குற்ற மாகும் இறைக்கு? | |
| 437 | செயற்பால செய்யா திவறியான் செல்வம் |
| உயற்பால தன்றிக் கெடும். | |
| 438 | பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும் |
| எண்ணப் படுவதொன் றன்று. | |
| 439 | வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க |
| நன்றி பயவா வினை. | |
| 440 | காதல காதல் அறியாமை உய்க்கிற்பின் |
| ஏதில ஏதிலார் நூல். | |
| 2.1.7 பெரியாரைத் துணைக்கோடல் | |
| 441 | அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை |
| திறனறிந்து தேர்ந்து கொளல். | |
| 442 | உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும் |
| பெற்றியார்ப் பேணிக் கொளல். | |
| 443 | அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப் |
| பேணித் தமராக் கொளல். | |
| 444 | தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல் |
| வன்மையு ளெல்லாந் தலை. | |
| 445 | சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன் |
| சூழ்வாரைக் சூழ்ந்து கொளல். | |
| 446 | தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச் |
| செற்றார் செயக்கிடந்த தில். | |
| 447 | இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே |
| கெடுக்குந் தகைமை யவர். | |
| 448 | இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் |
| கெடுப்பா ரிலானுங் கெடும். | |
| 449 | முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ் |
| சார்பிலார்க் கில்லை நிலை. | |
| 450 | பல்லார் பகை கொளலிற் பத்தடுத்த தீமைத்தே |
| நல்லார் தொடர்கை விடல். | |
| 2.1.8 சிற்றினஞ்சேராமை | |
| 451 | சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான் |
| சுற்றமாச் சூழ்ந்து விடும். | |
| 452 | நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு |
| இனத்தியல்ப தாகும் அறிவு. | |
| 453 | மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம் |
| இன்னான் எனப்படுஞ் சொல். | |
| 454 | மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு |
| இனத்துள தாகும் அறிவு. | |
| 455 | மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் |
| இனந்தூய்மை தூவா வரும். | |
| 456 | மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு |
| இல்லைநன் றாகா வினை. | |
| 457 | மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம் |
| எல்லாப் புகழும் தரும். | |
| 458 | மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு |
| இனநலம் ஏமாப் புடைத்து. | |
| 459 | மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும் |
| இனநலத்தின் ஏமாப் புடைத்து. | |
| 460 | நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின் |
| அல்லற் படுப்பதூஉம் இல். | |
| 2.1.9 தெரிந்துசெயல்வகை | |
| 461 | அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும் |
| ஊதியமும் சூழ்ந்து செயல். | |
| 462 | தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு |
| அரும்பொருள் யாதொன்றும் இல் | |
| 463 | ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை |
| ஊக்கார் அறிவுடை யார். | |
| 464 | தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும் |
| ஏதப்பாடு அஞ்சு பவர். | |
| 465 | வகையறச் சூழா தெழுதல் பகைவரைப் |
| பாத்திப் படுப்பதோ ராறு. | |
| 466 | செய்தக்க அல்ல செயக் கெடும் செய்தக்க |
| செய்யாமை யானுங் கெடும். | |
| 467 | எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் |
| எண்ணுவம் என்பது இழுக்கு. | |
| 468 | ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று |
| போற்றினும் பொத்துப் படும். | |
| 469 | நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர் |
| பண்பறிந் தாற்றாக் கடை. | |
| 470 | எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு |
| கொள்ளாத கொள்ளாது உலகு. | |
| 2.1.10 வலியறிதல் | |
| 471 | வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் |
| துணைவலியும் தூக்கிச் செயல். | |
| 472 | ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச் |
| செல்வார்க்குச் செல்லாதது இல். | |
| 473 | உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி |
| இடைக்கண் முரிந்தார் பலர். | |
| 474 | அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை |
| வியந்தான் விரைந்து கெடும். | |
| 475 | பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ் |
| சால மிகுத்துப் பெயின். | |
| 476 | நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின் |
| உயிர்க்கிறுதி ஆகி விடும். | |
| 477 | ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள் |
| போற்றி வழங்கு நெறி. | |
| 478 | ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை |
| போகாறு அகலாக் கடை. | |
| 479 | அளவறந்து வாழாதான் வாழ்க்கை உளபோல |
| இல்லாகித் தோன்றாக் கெடும். | |
| 480 | உளவரை தூக்காத ஒப்புர வாண்மை |
| வளவரை வல்லைக் கெடும். | |
| 2.1.11 காலமறிதல் | |
| 481 | பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும் |
| வேந்தர்க்கு வேண்டும் பொழுது. | |
| 482 | பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத் |
| தீராமை ஆர்க்குங் கயிறு. | |
| 483 | அருவினை யென்ப உளவோ கருவியான் |
| காலம் அறந்து செயின். | |
| 484 | ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம் |
| கருதி இடத்தாற் செயின். | |
| 485 | காலம் கருதி இருப்பர் கலங்காது |
| ஞாலம் கருது பவர். | |
| 486 | ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர் |
| தாக்கற்குப் பேருந் தகைத்து. | |
| 487 | பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து |
| உள்வேர்ப்பர் ஒள்ளி யவர். | |
| 488 | செறுநரைக் காணின் சுமக்க இறுவரை |
| காணின் கிழக்காம் தலை. | |
| 489 | எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே |
| செய்தற் கரிய செயல். | |
| 490 | கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் |
| குத்தொக்க சீர்த்த இடத்து. | |
| 2.1.12 இடனறிதல் | |
| 491 | தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும் |
| இடங்கண்ட பின்அல் லது. | |
| 492 | முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம் |
| ஆக்கம் பலவுந் தரும். | |
| 493 | ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து |
| போற்றார்கண் போற்றிச் செயின். | |
| 494 | எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து |
| துன்னியார் துன்னிச் செயின். | |
| 495 | நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின் |
| நீங்கின் அதனைப் பிற. | |
| 496 | கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும் |
| நாவாயும் ஓடா நிலத்து. | |
| 497 | அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை |
| எண்ணி இடத்தால் செயின். | |
| 498 | சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான் |
| ஊக்கம் அழிந்து விடும். | |
| 499 | சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர் |
| உறைநிலத்தோடு ஒட்டல் அரிது. | |
| 500 | காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா |
| வேலாள் முகத்த களிறு. | |
| 2.1.13 தெரிந்துதெளிதல் | |
| 501 | அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின் |
| திறந்தெரிந்து தேறப் படும். | |
| 502 | குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும் |
| நாணுடையான் சுட்டே தெளிவு. | |
| 503 | அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் |
| இன்மை அரிதே வெளிறு. | |
| 504 | குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் |
| மிகைநாடி மிக்க கொளல். | |
| 505 | பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் |
| கருமமே கட்டளைக் கல். | |
| 506 | அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர் |
| பற்றிலர் நாணார் பழி. | |
| 507 | காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல் |
| பேதைமை எல்லாந் தரும். | |
| 508 | தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை |
| தீரா இடும்பை தரும். | |
| 509 | தே றற்க யாரையும் தேராது தேர்ந்தபின் |
| தேறுக தேறும் பொருள். | |
| 510 | தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் |
| தீரா இடும்பை தரும். | |
| 2.1.14 தெரிந்துவினையாடல் | |
| 511 | நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த |
| தன்மையான் ஆளப் படும். | |
| 512 | வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை |
| ஆராய்வான் செய்க வினை. | |
| 513 | அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும் |
| நன்குடையான் கட்டே தெளிவு. | |
| 514 | எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான் |
| வேறாகும் மாந்தர் பலர். | |
| 515 | அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான் |
| சிறந்தானென்று ஏவற்பாற் றன்று. | |
| 516 | செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு |
| எய்த உணர்ந்து செயல். | |
| 517 | இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து |
| அதனை அவன்கண் விடல். | |
| 518 | வினைக் குரிமை நாடிய பின்றை அவனை |
| அதற்குரிய னாகச் செயல். | |
| 519 | வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக |
| நினைப்பானை நீங்கும் திரு. | |
| 520 | நாடோ றும் நாடுக மன்னன் வினைசெய்வான் |
| கோடாமை கோடா துலகு. | |
| 2.1.15 சுற்றந்தழால் | |
| 521 | பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல் |
| சுற்றத்தார் கண்ணே உள. | |
| 522 | விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா |
| ஆக்கம் பலவும் தரும். | |
| 523 | அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக் |
| கோடின்றி நீர்நிறைந் தற்று. | |
| 524 | சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான் |
| பெற்றத்தால் பெற்ற பயன். | |
| 525 | கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய |
| சுற்றத்தால் சுற்றப் படும். | |
| 526 | பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின் |
| மருங்குடையார் மாநிலத்து இல். | |
| 527 | காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும் |
| அன்னநீ ரார்க்கே உள. | |
| 528 | பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் |
| அதுநோக்கி வாழ்வார் பலர். | |
| 529 | தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக் |
| காரணம் இன்றி வரும். | |
| 530 | உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன் |
| இழைத் திருந்து எண்ணிக் கொளல். | |
| 2.1.16 பொச்சாவாமை | |
| 531 | இறந்த வெகுளியின் தீதே சிறந்த |
| உவகை மகிழ்ச்சியிற் சோர்வு. | |
| 532 | பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை |
| நிச்ச நிரப்புக் கொன் றாங்கு. | |
| 533 | பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்து |
| எப்பால்நூ லோர்க்கும் துணிவு. | |
| 534 | அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை |
| பொச்சாப் புடையார்க்கு நன்கு. | |
| 535 | முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை |
| பின்னூறு இரங்கி விடும். | |
| 536 | இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை |
| வாயின் அதுவொப்பது இல். | |
| 537 | அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக் |
| கருவியால் போற்றிச் செயின். | |
| 538 | புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது |
| இகழ்ந்தார்க்கு எழுமையும் இல். | |
| 539 | இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம் |
| மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து. | |
| 540 | உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான் |
| உள்ளியது உள்ளப் பெறின். | |
| 2.1.17 செங்கோன்மை | |
| 541 | ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும் |
| தேர்ந்துசெய் வஃதே முறை. | |
| 542 | வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் |
| கோல் நோக்கி வாழுங் குட. | |
| 543 | அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் |
| நின்றது மன்னவன் கோல். | |
| 544 | குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன் |
| அடிதழீஇ நிற்கும் உலகு. | |
| 545 | இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட |
| பெயலும் விளையுளும் தொக்கு. | |
| 546 | வேலன்று வென்றி தருவது மன்னவன் |
| கோலதூஉங் கோடா தெனின். | |
| 547 | இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை |
| முறைகாக்கும் முட்டாச் செயின். | |
| 548 | எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன் |
| தண்பதத்தான் தானே கெடும். | |
| 549 | குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல் |
| வடுவன்று வேந்தன் தொழில். | |
| 550 | கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் |
| களைகட் டதனொடு நேர். | |
| 2.1.18 கொடுங்கோன்மை | |
| 551 | கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு |
| அல்லவை செய்தொழுகும் வேந்து. | |
| 552 | வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும் |
| கோலொடு நின்றான் இரவு. | |
| 553 | நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன் |
| நாடொறும் நாடு கெடும். | |
| 554 | கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச் |
| சூழாது செய்யும் அரசு. | |
| 555 | அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே |
| செல்வத்தைத் தேய்க்கும் படை | |
| 556 | மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல் |
| மன்னாவாம் மன்னர்க் கொளி. | |
| 557 | துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன் |
| அளியின்மை வாழும் உயிர்க்கு. | |
| 558 | இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா |
| மன்னவன் கோற்கீழ்ப் படின். | |
| 559 | முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி |
| ஒல்லாது வானம் பெயல். | |
| 560 | ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் |
| காவலன் காவான் எனின். | |
| 2.1.19 வெருவந்தசெய்யாமை | |
| 561 | தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால் |
| ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து. | |
| 562 | கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம் |
| நீங்காமை வேண்டு பவர். | |
| 563 | வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின் |
| ஒருவந்தம் ஒல்லைக் கெடும். | |
| 564 | இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன் |
| உறைகடுகி ஒல்லைக் கெடும். | |
| 565 | அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம் |
| பேஎய்கண் டன்னது உடைத்து. | |
| 566 | கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம் |
| நீடின்றி ஆங்கே கெடும். | |
| 567 | கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன் |
| அடுமுரண் தேய்க்கும் அரம். | |
| 568 | இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச் |
| சீறிற் சிறுகும் திரு. | |
| 569 | செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன் |
| வெருவந்து வெய்து கெடும். | |
| 570 | கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது |
| இல்லை நிலக்குப் பொறை. | |
| 2.1.20 கண்ணோட்டம் | |
| 571 | கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை |
| உண்மையான் உண்டிவ் வுலகு. | |
| 572 | கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார் |
| உண்மை நிலக்குப் பொறை. | |
| 573 | பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம் |
| கண்ணோட்டம் இல்லாத கண். | |
| 574 | உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால் |
| கண்ணோட்டம் இல்லாத கண். | |
| 575 | கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல் |
| புண்ணென்று உணரப் படும் | |
| 576 | மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ |
| டியைந்துகண் ணோடா தவர். | |
| 577 | கண்ணோட் டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார் |
| கண்ணோட்டம் இன்மையும் இல். | |
| 578 | கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு |
| உரிமை உடைத்திவ் வுலகு. | |
| 579 | ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப் |
| பொறுத்தாற்றும் பண்பே தலை. | |
| 580 | பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க |
| நாகரிகம் வேண்டு பவர். | |
| 2.1.21 ஒற்றாடல் | |
| 581 | ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும் |
| தெற்றென்க மன்னவன் கண். | |
| 582 | எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும் |
| வல்லறிதல் வேந்தன் தொழில். | |
| 583 | ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன் |
| கொற்றங் கொளககிடந்தது இல். | |
| 584 | வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு |
| அனைவரையும் ஆராய்வது ஒற்று. | |
| 585 | கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும் |
| உகாஅமை வல்லதே ஒற்று. | |
| 586 | துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து |
| என்செயினும் சோர்விலது ஒற்று. | |
| 587 | மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை |
| ஐயப்பாடு இல்லதே ஒற்று. | |
| 588 | ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர் |
| ஒற்றினால் ஒற்றிக் கொளல். | |
| 589 | ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர் |
| சொற்றொக்க தேறப் படும். | |
| 590 | சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின் |
| புறப்படுத்தான் ஆகும் மறை. | |
| 2.1.22 ஊக்கமுடைமை | |
| 591 | உடையர் எனப்படுவது ஊக்கம் அஃ தில்லார் |
| உடையது உடையரோ மற்று. | |
| 592 | உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை |
| நில்லாது நீங்கி விடும். | |
| 593 | க்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம் |
| ஒருவந்தம் கைத்துடை யார். | |
| 594 | க்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா |
| ஊக்க முடையா னுழை. | |
| 595 | வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் |
| உள்ளத் தனையது உயர்வு. | |
| 596 | உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது |
| தள்ளினுந் தள்ளாமை நீர்த்து. | |
| 597 | சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற் |
| பட்டுப்பா டூன்றுங் களிறு. | |
| 598 | உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து |
| வள்ளியம் என்னுஞ் செருக்கு. | |
| 599 | பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை |
| வ்ருஉம் புலிதாக் குறின். | |
| 600 | உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார் |
| மரம்மக்க ளாதலே வேறு. | |
| 2.1.23 மடியின்மை | |
| 601 | குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும் |
| மாசூர மாய்ந்து கெடும். | |
| 602 | மடியை மடியா ஒழுகல் குடியைக் |
| குடியாக வேண்டு பவர். | |
| 603 | மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த |
| குடிமடியும் தன்னினும் முந்து. | |
| 604 | குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து |
| மாண்ட உஞற்றி லவர்க்கு. | |
| 605 | நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் |
| கெடுநீரார் காமக் கலன். | |
| 606 | படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார் |
| மாண்பயன் எய்தல் அரிது. | |
| 607 | இடிபுரிந்து எள்ளுஞ் சொல் கேட்பர் மடிபுரிந்து |
| மாண்ட உஞற்றி லவர். | |
| 608 | மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு |
| அடிமை புகுத்தி விடும். | |
| 609 | குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன் |
| மடியாண்மை மாற்றக் கெடும். | |
| 610 | மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான் |
| தாஅய தெல்லாம் ஒருங்கு. | |
| 2.1.24 ஆள்வினையுடைமை | |
| 611 | அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் |
| பெருமை முயற்சி தரும். | |
| 612 | வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை |
| தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு. | |
| 613 | தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே |
| வேளாண்மை என்னுஞ் செருக்கு. | |
| 614 | தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை |
| வாளாண்மை போலக் கெடும். | |
| 615 | இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர் |
| துன்பம் துடைத்தூன்றும் தூண். | |
| 616 | முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை |
| இன்மை புகுத்தி விடும். | |
| 617 | மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான் |
| தாளுளான் தாமரையி னாள். | |
| 618 | பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து |
| ஆள்வினை இன்மை பழி. | |
| 619 | தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் |
| மெய்வருத்தக் கூலி தரும். | |
| 620 | ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் |
| தாழாது உஞற்று பவர். | |
| 2.1.25 இடுக்கணழியாமை | |
| 621 | இடுக்கண் வருங்கால் நகுக அதனை |
| அடுத்தூர்வது அஃதொப்ப தில். | |
| 622 | வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான் |
| உள்ளத்தின் உள்ளக் கெடும். | |
| 623 | இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு |
| இடும்பை படாஅ தவர். | |
| 624 | மடுத்தவா யெல்லம் பகடன்னான் உற்ற |
| இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து. | |
| 625 | அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற |
| இடுக்கண் இடுக்கட் படும். | |
| 626 | அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று |
| ஓம்புதல் தேற்றா தவர். | |
| 627 | இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக் |
| கையாறாக் கொள்ளாதாம் மேல். | |
| 628 | இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான் |
| துன்பம் உறுதல் இலன். | |
| 629 | இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள் |
| துன்பம் உறுதல் இலன். | |
| 630 | இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன் |
| ஒன்னார் விழையுஞ் சிறப்பு. | |
| 2.2 அமைச்சியல் | |
| 2.2.1 அமைச்சு | |
| 631 | கருவியும் காலமும் செய்கையும் செய்யும் |
| அருவினையும் மாண்டது அமைச்சு. | |
| 632 | வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு |
| ஐந்துடன் மாண்டது அமைச்சு. | |
| 633 | பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப் |
| பொருத்தலும் வல்ல தமைச்சு. | |
| 634 | தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச் |
| சொல்லலும் வல்லது அமைச்சு. | |
| 635 | அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந் |
| திறனறிந்தான் தேர்ச்சித் துணை. | |
| 636 | மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம் |
| யாவுள முன்நிற் பவை. | |
| 637 | செயற்கை அறந்தக் கடைத்தும் உலகத்து |
| இயற்கை அறிந்து செயல். | |
| 638 | அறிகொன்று அறியான் எனினும் உறுதி |
| உழையிருந்தான் கூறல் கடன். | |
| 639 | பழுதெண்ணும் மந்திரியின் பக்கததுள் தெவ்வோர் |
| எழுபது கோடி உறும். | |
| 640 | முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர் |
| திறப்பாடு இலாஅ தவர். | |
| 2.2.2 சொல்வன்மை | |
| 641 | நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம் |
| யாநலத்து உள்ளதூஉம் அன்று. | |
| 642 | ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால் |
| காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு. | |
| 643 | கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் |
| வேட்ப மொழிவதாம் சொல். | |
| 644 | திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும் |
| பொருளும் அதனினூஉங்கு இல். | |
| 645 | சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை |
| வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து. | |
| 646 | வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல் |
| மாட்சியின் மாசற்றார் கோள். | |
| 647 | சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை |
| இகல்வெல்லல் யார்க்கும் அரிது. | |
| 648 | விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது |
| சொல்லுதல் வல்லார்ப் பெறின். | |
| 649 | பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற |
| சிலசொல்லல் தேற்றா தவர். | |
| 650 | இண்ருழ்த்தும் நாறா மலரனையர் கற்றது |
| உணர விரித்துரையா தார். | |
| 2.2.3 வினைத்தூய்மை | |
| 651 | துணைநலம் ஆக்கம் த்ருஉம் வினைநலம் |
| வேண்டிய எல்லாந் தரும். | |
| 652 | என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு |
| நன்றி பயவா வினை. | |
| 653 | ஒஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை |
| ஆஅதும் என்னு மவர். | |
| 654 | இடுக்கண் படினும் இளிவந்த செய்யார் |
| நடுக்கற்ற காட்சி யவர். | |
| 655 | எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல் |
| மற்றன்ன செய்யாமை நன்று. | |
| 656 | ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற் க |
| சான்றோர் பழிக்கும் வினை. | |
| 657 | பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர் |
| கழிநல் குரவே தலை. | |
| 658 | கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம் |
| முடிந்தாலும் பீழை தரும். | |
| 659 | அழக் கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும் |
| பிற்பயக்கும் நற்பா லவை. | |
| 660 | சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண் |
| கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று. | |
| 2.2.4 வினைத்திட்பம் | |
| 661 | வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் |
| மற்றைய எல்லாம் பிற. | |
| 662 | ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின் |
| ஆறென்பர் ஆய்ந்தவர் கோள். | |
| 663 | கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின் |
| எற்றா விழுமந் தரும். | |
| 664 | சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் |
| சொல்லிய வண்ணம் செயல். | |
| 665 | வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண் |
| ஊறெய்தி உள்ளப் படும். | |
| 666 | எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார் |
| திண்ணியர் ஆகப் பெறின். | |
| 667 | உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு |
| அச்சாணி அன்னார் உடைத்து. | |
| 668 | கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது |
| தூக்கங் கடிந்து செயல். | |
| 669 | துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி |
| இன்பம் பயக்கும் வினை. | |
| 670 | எனைத்திட்பம் எய் தியக் கண்ணும் வினைத்திட்பம் |
| வேண்டாரை வேண்டாது உலகு. | |
| 2.2.5 வினைசெயல்வகை | |
| 671 | சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு |
| தாழ்ச்சியுள் தங்குதல் தீது. | |
| 672 | தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க |
| தூங்காது செய்யும் வினை. | |
| 673 | ஙல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால் |
| செல்லும்வாய் நோக்கிச் செயல். | |
| 674 | வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால் |
| தீயெச்சம் போலத் தெறும். | |
| 675 | பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும் |
| இருள்தீர எண்ணிச் செயல். | |
| 676 | முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும் |
| படுபயனும் பார்த்துச் செயல். | |
| 677 | செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை |
| உள்ளறிவான் உள்ளம் கொளல். | |
| 678 | வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள் |
| யானையால் யானையாத் தற்று. | |
| 679 | நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே |
| ஒட்டாரை ஒட்டிக் கொளல். | |
| 680 | உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின் |
| கொள்வர் பெரியார்ப் பணிந்து. | |
| 2.2.6 தூது | |
| 681 | அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் |
| பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. | |
| 682 | அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு |
| இன்றி யமையாத மூன்று. | |
| 683 | நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள் |
| வென்றி வினையுரைப்பான் பண்பு. | |
| 684 | அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன் |
| செறிவுடையான் செல்க வினைக்கு. | |
| 685 | தொகச் சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி |
| நன்றி பயப்பதாந் தூது. | |
| 686 | கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால் |
| தக்கது அறிவதாம் தூது. | |
| 687 | கடனறிந்து காலங் கருதி இடனறிந்து |
| எண்ணி உரைப்பான் தலை. | |
| 688 | தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின் |
| வாய்மை வழியுரைப்பான் பண்பு. | |
| 689 | விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம் |
| வாய்சேரா வன்கணவன். | |
| 690 | இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற் கு |
| உறுதி பயப்பதாம் தூது. | |
| 2.2.7 மன்னரைச் சேர்ந்தொழுதல் | |
| 691 | அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க |
| இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார். | |
| 692 | மன்னர் விழைப விழையாமை மன்னரால் |
| மன்னிய ஆக்கந் தரும். | |
| 693 | போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின் |
| தேற்றுதல் யார்க்கும் அரிது. | |
| 694 | செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல் |
| ஆன்ற பெரியா ரகத்து. | |
| 695 | எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை |
| விட்டக்கால் கேட்க மறை. | |
| 696 | குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில |
| வேண்டுப வேட்பச் சொலல். | |
| 697 | வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும் |
| கேட்பினும் சொல்லா விடல். | |
| 698 | இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற |
| ஒளியோடு ஒழுகப் படும். | |
| 699 | கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார் |
| துளக்கற்ற காட்சி யவர். | |
| 700 | பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும் |
| கெழுதகைமை கேடு தரும். | |
| 2.2.8 குறிப்பறிதல் | |
| 701 | கூறாமை நோக்கக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும் |
| மாறாநீர் வையக் கணி. | |
| 702 | ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத் |
| தெய்வத்தோ டொப்பக் கொளல். | |
| 703 | குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள் |
| யாது கொடுத்தும் கொளல். | |
| 704 | குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை |
| உறுப்போ ரனையரால் வேறு. | |
| 705 | குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள் |
| என்ன பயத்தவோ கண்? | |
| 706 | அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் |
| கடுத்தது காட்டும் முகம். | |
| 707 | முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும் |
| காயினும் தான்முந் துறும். | |
| 708 | முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி |
| உற்ற துணர்வார்ப் பெறின். | |
| 709 | பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின் |
| வகைமை உணர்வார்ப் பெறின். | |
| 710 | நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால் |
| கண்ணல்லது இல்லை பிற. | |
| 2.2.9 அவையறிதல் | |
| 711 | அவையறிநது ஆராய்ந்து சொல்லுக சொல்லின் |
| தொகையறிந்த தூய்மை யவர். | |
| 712 | இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின் |
| நடைதெரிந்த நன்மை யவர். | |
| 713 | அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின் |
| வகையறியார் வல்லதூஉம் இல். | |
| 714 | ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன் |
| வான்சுதை வண்ணம் கொளல். | |
| 715 | நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள் |
| முந்து கிளவாச் செறிவு. | |
| 716 | ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம் |
| ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு. | |
| 717 | கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச் |
| சொல்தெரிதல் வல்லார் அகத்து. | |
| 718 | உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன் |
| பாத்தியுள் நீர்சொரிந் தற்று. | |
| 719 | புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள் |
| நன்குசலச் சொல்லு வார். | |
| 720 | அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார் |
| அல்லார்முன் கோட்டி கொளல். | |
| 2.2.10 அவையஞ்சாமை | |
| 721 | வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின் |
| தொகையறிந்த தூய்மை யவர். | |
| 722 | கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் |
| கற்ற செலச்சொல்லு வார். | |
| 723 | பகையகத்துச் சாவார் எளியர் அரியர் |
| அவையகத்து அஞ்சா தவர். | |
| 724 | கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற |
| மிக்காருள் மிக்க கொளல். | |
| 725 | ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா |
| மாற்றங் கொடுத்தற் பொருட்டு. | |
| 726 | வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென் |
| நுண்ணவை அஞ்சு பவர்க்கு. | |
| 727 | பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து |
| அஞ்சு மவன்கற்ற நூல். | |
| 728 | பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள் |
| நன்கு செலச்சொல்லா தார். | |
| 729 | கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும் |
| நல்லா ரவையஞ்சு வார். | |
| 730 | உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக் |
| கற்ற செலச்சொல்லா தார். | |
| 2.3 அங்கவியல் | |
| 2.3.1 நாடு | |
| 731 | தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் |
| செல்வரும் சேர்வது நாடு. | |
| 732 | பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால் |
| ஆற்ற விளைவது நாடு. | |
| 733 | பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு |
| இறையொருங்கு நேர்வது நாடு. | |
| 734 | உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் |
| சேரா தியல்வது நாடு. | |
| 735 | பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் |
| கொல்குறும்பும் இல்லது நாடு. | |
| 736 | கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா |
| நாடென்ப நாட்டின் தலை. | |
| 737 | இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் |
| வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு. | |
| 738 | பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் |
| அணியென்ப நாட்டிவ் வைந்து. | |
| 739 | நாடென்ப நாடா வளத்தன நாடல்ல |
| நாட வளந்தரு நாடு. | |
| 740 | ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே |
| வேந்தமை வில்லாத நாடு. | |
| 2.3.2 அரண் | |
| 741 | ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற் |
| போற்று பவர்க்கும் பொருள். | |
| 742 | மணிநீரும் மண்ணும் மலையும் அணிிழற் |
| காடும் உடைய தரண். | |
| 743 | உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின் |
| அமைவரண் என்றுரைக்கும் நூல். | |
| 744 | சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை |
| ஊக்கம் அழிப்ப தரண். | |
| 745 | கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார் |
| நிலைக்கெளிதாம் நீரது அரண். | |
| 746 | எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும் |
| நல்லாள் உடையது அரண். | |
| 747 | முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும் |
| பற்றற் கரியது அரண். | |
| 748 | முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப் |
| பற்றியார் வெல்வது அரண். | |
| 749 | முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து |
| வீறெய்தி மாண்ட தரண். | |
| 750 | எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி |
| இல்லார்கண் இல்லது அரண். | |
| 2.3.3 பொருள்செயல்வகை | |
| 751 | பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் |
| பொருளல்லது இல்லை பொருள். | |
| 752 | இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை |
| எல்லாரும் செய்வர் சிறப்பு. | |
| 752 | பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும் |
| எண்ணிய தேயத்துச் சென்று. | |
| 754 | அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து |
| தீதின்றி வந்த பொருள். | |
| 755 | அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம் |
| புல்லார் புரள விடல். | |
| 756 | உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த் |
| தெறுபொருளும் வேந்தன் பொருள். | |
| 757 | அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும் |
| செல்வச் செவிலியால் உண்டு. | |
| 758 | குன்றேறி யானைப் போர் கண்டற்றால் தன்கைத்தொன்று |
| உண்டாகச் செய்வான் வினை. | |
| 759 | செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும் |
| எஃகதனிற் கூரிய தில். | |
| 760 | ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள் |
| ஏனை இரண்டும் ஒருங்கு. | |
| 2.3.4 படைமாட்சி | |
| 761 | உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன் |
| வெறுக்கையுள் எல்லாம் தலை. | |
| 762 | உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத் |
| தொல்படைக் கல்லால் அரிது. | |
| 763 | ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை |
| நாகம் உயிர்ப்பக் கெடும். | |
| 764 | அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த |
| வன்க ணதுவே படை. | |
| 765 | கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும் |
| ஆற்ற லதுவே படை. | |
| 766 | மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் |
| எனநான்கே ஏமம் படைக்கு. | |
| 767 | தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த |
| போர்தாங்கும் தன்மை அறிந்து. | |
| 768 | அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை |
| படைத்தகையால் பாடு பெறும். | |
| 769 | சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும் |
| இல்லாயின் வெல்லும் படை. | |
| 770 | நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை |
| தலைமக்கள் இல்வழி இல். | |
| 2.3.5 படைச்செருக்கு | |
| 771 | என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை |
| முன்நின்று கல்நின் றவர். | |
| 772 | கான முயலெய்த அம்பினில் யானை |
| பிழைத்தவேல் ஏந்தல் இனிது. | |
| 773 | பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால் |
| ஊராண்மை மற்றதன் எஃகு. | |
| 774 | கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் |
| மெய்வேல் பறியா நகும். | |
| 775 | விழித்தகண் வேல்கொண டெறிய அழித்திமைப்பின் |
| ஒட்டன்றோ வன்க ணவர்க்கு. | |
| 776 | விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள் |
| வைக்கும்தன் நாளை எடுத்து. | |
| 777 | சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார் |
| கழல்யாப்புக் காரிகை நீர்த்து. | |
| 778 | உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன் |
| செறினும் சீர்குன்றல் இலர். | |
| 779 | இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே |
| பிழைத்தது ஒறுக்கிற் பவர். | |
| 780 | புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு |
| இரந்துகோள் தக்கது உடைத்து. | |
| 2,3.6 நட்பு | |
| 781 | செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் |
| வினைக்கரிய யாவுள காப்பு. | |
| 782 | நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் |
| பின்னீர பேதையார் நட்பு. | |
| 783 | நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் |
| பண்புடை யாளர் தொடர்பு. | |
| 784 | நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் |
| மேற்செனறு இடித்தற் பொருட்டு. | |
| 785 | புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் |
| நட்பாங் கிழமை தரும். | |
| 786 | முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து |
| அகநக நட்பது நட்பு. | |
| 787 | அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண் |
| அல்லல் உழப்பதாம் நட்பு. | |
| 788 | உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே |
| இடுக்கண் களைவதாம் நட்பு. | |
| 789 | நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி |
| ஒல்லும்வாய் ஊன்றும் நிலை. | |
| 790 | இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று |
| புனையினும் புல்லென்னும் நட்பு. | |
| 2.3.7 நட்பாராய்தல் | |
| 791 | நாடாது நட் டலிற் கேடில்லை நட்டபின் |
| வீடில்லை நட்பாள் பவர்க்கு. | |
| 792 | ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை |
| தான்சாம் துயரம் தரும். | |
| 793 | குணமும் குடிமையும் குற்றமும் குன்றா |
| இனனும் அறிந்தியாக்க நட்பு. | |
| 794 | குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக் |
| கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு. | |
| 795 | அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய |
| வல்லார்நடபு ஆய்ந்து கொளல். | |
| 796 | கேட்டினும் உண்டோ ர் உறுதி கிளைஞரை |
| நீட்டி அளப்பதோர் கோல். | |
| 797 | ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார் |
| கேண்மை ஒரீஇ விடல். | |
| 798 | உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க |
| அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு. | |
| 799 | கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை |
| உள்ளினும் உள்ளஞ் சுடும். | |
| 800 | மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும் |
| ஒருவுக ஒப்பிலார் நட்பு. | |
| 2.3.8 பழைமை | |
| 801 | பழைமை எனப்படுவது யாதெனின் யாதும் |
| கிழமையைக் கீழ்ந்திடா நட்பு. | |
| 802 | நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு |
| உப்பாதல் சான்றோர் கடன். | |
| 803 | பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை |
| செய்தாங்கு அமையாக் கடை. | |
| 804 | விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற் |
| கேளாது நட்டார் செயின். | |
| 805 | பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க |
| நோதக்க நட்டார் செயின். | |
| 806 | எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும் |
| தொல்லைக்கண் நின்றார் தொடர்பு. | |
| 807 | அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின் |
| வழிவந்த கேண்மை யவர். | |
| 808 | கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு |
| நாளிழுக்கம் நட்டார் செயின். | |
| 809 | கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை |
| விடாஅர் விழையும் உலகு. | |
| 810 | விழையார் விழையப் படுப பழையார்கண் |
| பண்பின் தலைப்பிரியா தார். | |
| 2.3.9 தீ நட்பு | |
| 811 | பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை |
| பெருகலிற் குன்றல் இனிது. | |
| 812 | உறின்நட்டு அறின்ஙருஉம் ஒப்பிலார் கேண்மை |
| பெறினும் இழப்பினும் என்? | |
| 813 | உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது |
| கொள்வாரும் கள்வரும் நேர். | |
| 814 | அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார் |
| தமரின் தனிமை தலை. | |
| 815 | செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை |
| எய்தலின் எய்தாமை நன்று. | |
| 816 | பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார் |
| ஏதின்மை கோடி உறும். | |
| 817 | நகைவகைய ராகிய நட்பின் பகைவரால் |
| பத்தடுத்த கோடி உறும். | |
| 818 | ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை |
| சொல்லாடார் சோர விடல். | |
| 819 | கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு |
| சொல்வேறு பட்டார் தொடர்பு. | |
| 820 | எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ |
| மன்றில் பழிப்பார் தொடர்பு. | |
| 2.3.10 கூடாநட்பு | |
| 821 | சீரிடம் காணின் எறிதற்குப் பட் டடை |
| நேரா நிரந்தவர் நட்பு. | |
| 822 | இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர் |
| மனம்போல வேறு படும். | |
| 823 | பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர் |
| ஆகுதல் மாணார்க் கரிது. | |
| 824 | முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா |
| வஞ்சரை அஞ்சப் படும். | |
| 825 | மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும் |
| சொல்லினால் தேறற்பாற்று அன்று. | |
| 826 | நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல் |
| ஒல்லை உணரப் படும். | |
| 827 | சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம் |
| தீங்கு குறித்தமை யான். | |
| 828 | தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார் |
| அழுதகண் ணீரும் அனைத்து. | |
| 829 | மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து |
| நட்பினுள் சாப்புல்லற் பாற்று. | |
| 830 | பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு |
| அகநட்பு ஒரீஇ விடல். | |
| 2.3.11 பேதைமை | |
| 831 | பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு |
| ஊதியம் போக விடல். | |
| 832 | பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை |
| கையல்ல தன்கட் செயல். | |
| 833 | நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும் |
| பேணாமை பேதை தொழில் | |
| 834 | ஓதி உணர்ந்தும் பிறர் க்குரைத்தும் தானடங்காப் |
| பேதையின் பேதையார் இல். | |
| 835 | ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும் |
| தான்புக் கழுந்தும் அளறு. | |
| 836 | பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப் |
| பேதை வினைமேற் கொளின். | |
| 837 | ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை |
| பெருஞ்செல்வம் உற்றக் கடை. | |
| 838 | மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன் |
| கையொன்று உடைமை பெறின். | |
| 839 | பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண் |
| பீழை தருவதொன் றில். | |
| 840 | கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர் |
| குழாஅத்துப் பேதை புகல். | |
| 2.3.12 புல்லறிவாண்மை | |
| 841 | அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை |
| இன்மையா வையா துலகு. | |
| 842 | அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும் |
| இல்லை பெறுவான் தவம். | |
| 843 | அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை |
| செறுவார்க்கும் செய்தல் அரிது. | |
| 844 | வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை |
| உடையம்யாம் என்னும் செருக்கு. | |
| 845 | கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற |
| வல்லதூஉம் ஐயம் தரும். | |
| 846 | அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின் |
| குற்றம் மறையா வழி. | |
| 847 | அருமறை சோரும் அறிவிலான் செய்யும் |
| பெருமிறை தானே தனக்கு. | |
| 848 | ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர் |
| போஒம் அளவுமோர் நோய். | |
| 849 | காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான் |
| கண்டானாம் தான்கண்ட வாறு. | |
| 850 | உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து |
| அலகையா வைக்கப் படும். | |
| 2.3.13 இகல் | |
| 851 | இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும் |
| பண்பின்மை பாரக்கும் நோய். | |
| 852 | பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி |
| இன்னாசெய் யாமை தலை. | |
| 853 | இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத் |
| தாவில் விளக்கம் தரும். | |
| 854 | இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும் |
| துன்பத்துள் துன்பங் கெடின். | |
| 855 | இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே |
| மிக்லூக்கும் தன்மை யவர். | |
| 856 | இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை |
| தவலும் கெடலும் நணித்து. | |
| 857 | மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல் |
| இன்னா அறிவி னவர். | |
| 858 | இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை |
| மிக்லூக்கின் ஊக்குமாம் கேடு. | |
| 859 | இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை |
| மிகல்காணும் கேடு தரற்கு. | |
| 860 | இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம் |
| நன்னயம் என்னும் செருக்கு. | |
| 2.3.14 பகைமாட்சி | |
| 861 | வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா |
| மெலியார்மேல் மேக பகை. | |
| 862 | அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான் |
| என்பரியும் ஏதிலான் துப்பு. | |
| 863 | அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான் |
| தஞ்சம் எளியன் பகைக்கு. | |
| 864 | நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும் |
| யாங்கணும் யார்க்கும் எளிது. | |
| 865 | வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான் |
| பண்பிலன் பற்றார்க்கு இனிது. | |
| 866 | காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான் |
| பேணாமை பேணப் படும். | |
| 867 | கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து |
| மாணாத செய்வான் பகை. | |
| 868 | குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு |
| இனனிலனாம் ஏமாப் புடைத்து. | |
| 869 | செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா |
| அஞ்சும் பகைவர்ப் பெறின். | |
| 870 | கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும் |
| ஒல்லானை ஒல்லா தொளி. | |
| 2.3.15 பகைத்திறந்தெரிதல் | |
| 871 | பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன் |
| நகையேயும் வேண்டற்பாற்று அன்று. | |
| 872 | வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க |
| சொல்லேர் உழவர் பகை. | |
| 873 | ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப் |
| பல்லார் பகைகொள் பவன். | |
| 874 | பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன் |
| தகைமைக்கண் தங்கிற்று உலகு. | |
| 875 | தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன் |
| இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று. | |
| 876 | தேறனும் தேறா விடினும் அழிவின்கண் |
| தேறான் பகாஅன் விடல். | |
| 877 | நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க |
| மென்மை பகைவர் அகத்து. | |
| 878 | வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும் |
| பகைவர்கண் பட்ட செருக்கு. | |
| 879 | இளைதாக முள்மரம் கொல்க களையுநர் |
| கைகொல்லும் காழ்த்த இடத்து. | |
| 880 | உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர் |
| செம்மல் சிதைக்கலா தார். | |
| 2.3.16 உட்பகை | |
| 881 | நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும் |
| இன்னாவாம் இன்னா செயின். | |
| 882 | வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுக |
| கேள்போல் பகைவர் தொடர்பு. | |
| 883 | உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து |
| மட்பகையின் மாணத் தெறும். | |
| 884 | மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா |
| ஏதம் பலவும் தரும். | |
| 885 | உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான் |
| ஏதம் பலவும் தரும். | |
| 886 | ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும் |
| பொன்றாமை ஒன்றல் அரிது. | |
| 887 | செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே |
| உட்பகை உற்ற குடி. | |
| 888 | அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது |
| உட்பகை உற்ற குடி. | |
| 889 | எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும் |
| உட்பகை உள்ளதாங் கேடு. | |
| 890 | உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள் |
| பாம்போடு உடனுறைந் தற்று. | |
| 2.3.17 பெரியாரைப் பிழையாமை | |
| 891 | ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார் |
| போற்றலுள் எல்லாம் தலை. | |
| 892 | பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால் |
| பேரா இடும்பை தரும். | |
| 893 | கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின் |
| ஆற்று பவர்கண் இழுக்கு. | |
| 894 | கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு |
| ஆற்றாதார் இன்னா செயல். | |
| 895 | யாண்டுச் சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின் |
| வேந்து செறப்பட் டவர். | |
| 896 | எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார் |
| பெரியார்ப் பிழைத்தொழுகு வார். | |
| 897 | வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம் |
| தகைமாண்ட தக்கார் செறின். | |
| 898 | குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு |
| நின்றன்னார் மாய்வர் நிலத்து. | |
| 899 | ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து |
| வேந்தனும் வேந்து கெடும். | |
| 900 | இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார் |
| சிறந்தமைந்த சீரார் செறின். | |
| 2.3.18 பெண்வழிச்சேறல் | |
| 901 | மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார் |
| வேண்டாப் பொருளும் அது. | |
| 902 | பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர் |
| நாணாக நாணுத் தரும். | |
| 903 | இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும் |
| நல்லாருள் நாணுத் தரும். | |
| 904 | மனையாளை அஞ்சும் மறுமையி லாளன் |
| வினையாண்மை வீறெய்த லின்று. | |
| 905 | இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும் |
| நல்லார்க்கு நல்ல செயல். | |
| 906 | இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள் |
| அமையார்தோள் அஞ்சு பவர். | |
| 907 | பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப் |
| பெண்ணே பெருமை உடைத்து. | |
| 908 | நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள் |
| பெட் டாங்கு ஒழுகு பவர். | |
| 909 | அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும் |
| பெண்ஏவல் செய்வார்கண் இல். | |
| 910 | எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும் |
| பெண்சேர்ந்தாம் பேதைமை இல். | |
| 2.3.19 வரைவின்மகளிர் | |
| 911 | அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார் |
| இன்சொல் இழுக்குத் தரும். | |
| 912 | பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர் |
| நயன்தூக்கி நள்ளா விடல். | |
| 913 | பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில் |
| ஏதல் பிணந்தழீஇ அற்று. | |
| 914 | பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள் |
| ஆயும் அறிவி னவர். | |
| 915 | பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின் |
| மாண்ட அறிவி னவர். | |
| 916 | தந்நலம் பாரப்பார் தோயார் தகைசெருக்கிப் |
| புன்னலம் பாரிப்பார் தோள். | |
| 917 | நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார் பிறநெஞ்சிற் |
| பேணிப் புணர்பவர் தோள். | |
| 918 | ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப |
| மாய மகளிர் முயக்கு. | |
| 919 | வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப் |
| பூரியர்கள் ஆழும் அளறு. | |
| 920 | இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் |
| திருநீக்கப் பட்டார் தொடர்பு. | |
| 2.3.20 கள்ளுண்ணாமை | |
| 921 | உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும் |
| கட்காதல் கொண்டொழுகு வார். | |
| 922 | உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான் |
| எண்ணப் படவேண்டா தார். | |
| 923 | ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச் |
| சான்றோர் முகத்துக் களி. | |
| 924 | நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும் |
| பேணாப் பெருங்குற்றத் தார்க்கு. | |
| 925 | கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து |
| மெய்யறி யாமை கொளல். | |
| 926 | துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும் |
| நஞ்சுண்பார் கள்ளுண் பவர். | |
| 927 | உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும் |
| கள்ளொற்றிக் கண்சாய் பவர்3 | |
| 928 | களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து |
| ஒளித்ததூஉம் ஆங்கே மிகும். | |
| 929 | களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க் |
| குளித்தானைத் தீத்துரீஇ அற்று. | |
| 930 | கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால் |
| உள்ளான்கொல் உண்டதன் சோர்வு. | |
| 2.3.21 சூது | |
| 931 | வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம் |
| தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று. | |
| 932 | ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல் |
| நன்றெய்தி வாழ்வதோர் ஆறு. | |
| 933 | உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம் |
| போஒய்ப் புறமே படும். | |
| 934 | சிறுமை பலசெய்து சீரழக்கும் சூதின் |
| வறுமை தருவதொன்று இல். | |
| 935 | கவறும் கழகமும் கையும் தருக்கி |
| இவறியார் இல்லாகி யார். | |
| 936 | அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும் |
| முகடியான் மூடப்பட் டார். | |
| 937 | பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் |
| கழகத்துக் காலை புகின். | |
| 938 | பொருள் கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து |
| அல்லல் உழப்பிக்கும் சூது. | |
| 939 | உடைசெ்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும் |
| அடையாவாம் ஆயங் கொளின். | |
| 940 | இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம் |
| உழத்தொறூஉம் காதற்று உயிர். | |
| 2.3.22 மருந்து | |
| 941 | மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் |
| வளிமுதலா எண்ணிய மூன்று. | |
| 942 | மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது |
| அற்றது போற்றி உணின். | |
| 943 | அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு |
| பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு. | |
| 944 | அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல |
| துய்க்க துவரப் பசித்து. | |
| 945 | மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின் |
| ஊறுபாடு இல்லை உயிர்க்கு. | |
| 946 | இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும் |
| கழிபேர் இரையான்கண் நோய். | |
| 947 | தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின் |
| நோயள வின்றிப் படும். | |
| 948 | நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் |
| வாய்நாடி வாய்ப்பச் செயல். | |
| 949 | உற்றான் அளவும் பிணியளவும் காலமும் |
| கற்றான் கருதிச் செயல். | |
| 950 | உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று |
| அப்பால் நாற் கூற்றே மருந்து. | |
| 2.4 ஒழிபியல் | |
| 2.4.1 குடிமை | |
| 951 | இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச் |
| செப்பமும் நாணும் ஒருங்கு. | |
| 952 | ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இம் மூன்றும் |
| இழுக்கார் குடிப்பிறந் தார். | |
| 953 | நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும் |
| வகையென்ப வாய்மைக் குடிக்கு. | |
| 954 | அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார் |
| குன்றுவ செய்தல் இலர். | |
| 955 | வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி |
| பண்பில் தலைப்பிரிதல் இன்று. | |
| 956 | சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற |
| குலம்பற்றி வாழ்தும் என் பார். | |
| 957 | குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின் |
| மதக்கண் மறுப்போல் உயர்ந்து. | |
| 958 | நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக் |
| குலத்தின்கண் ஐயப் படும். | |
| 959 | நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும் |
| குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல். | |
| 960 | நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம் வேண்டின் |
| வேண்டுக யார்க்கும் பணிவு. | |
| 2.4.2 மானம் | |
| 961 | இன்றி அமையாச் சிறப்பின ஆயினும் |
| குன்ற வருப விடல். | |
| 962 | சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு |
| பேராண்மை வேண்டு பவர். | |
| 963 | பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய |
| சுருக்கத்து வேண்டும் உயர்வு. | |
| 964 | தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர் |
| நிலையின் இழிந்தக் கடை. | |
| 965 | குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ |
| குன்றி அனைய செயின். | |
| 966 | புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று |
| இகழ்வார்பின் சென்று நிலை. | |
| 967 | ஒட் டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே |
| கெட்டான் எனப்படுதல் நன்று. | |
| 968 | மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை |
| பீடழிய வந்த இடத்து. | |
| 969 | மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் |
| உயிர்நீப்பர் மானம் வரின். | |
| 970 | இளிவரின் வாழாத மானம் உடையார் |
| ஒளிதொழுது ஏத்தும் உலகு. | |
| 2.4.3 பெருமை | |
| 971 | ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு |
| அஃதிறந்து வாழ்தும் எனல். | |
| 972 | பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா |
| செய்தொழில் வேற்றுமை யான். | |
| 973 | மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும் |
| கீழல்லார் கீழல் லவர். | |
| 974 | ஒருமை மகளிரே போலப் பெருமையும் |
| தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு. | |
| 975 | பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின் |
| அருமை உடைய செயல். | |
| 976 | சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப் |
| பேணிக் கொள் வேம் என்னும் ோக்கு. | |
| 977 | இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான் |
| சீரல் லவர்கண் படின். | |
| 978 | பணியுமாம் என்றும் பெருமை சிறுமை |
| அணியுமாம் தன்னை வியந்து. | |
| 979 | பெருமை பெருமிதம் இன்மை சிறுமை |
| பெருமிதம் ஊர்ந்து விடல். | |
| 980 | அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான் |
| குற்றமே கூறி விடும். | |
| 2.4.4 சான்றாண்மை | |
| 981 | கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து |
| சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு. | |
| 982 | குணநலம் சான்றோர் நலனே பிறநலம் |
| எந்நலத்து உள்ளதூஉம் அன்று. | |
| 983 | அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு |
| ஐந்துசால் ஊன்றிய தூண். | |
| 984 | கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை |
| சொல்லா நலத்தது சால்பு. | |
| 985 | ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர் |
| மாற்றாரை மாற்றும் படை. | |
| 986 | சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி |
| துலையல்லார் கண்ணும் கொளல். | |
| 987 | இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால் |
| என்ன பயத்ததோ சால்பு. | |
| 988 | இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும் |
| திண்மை உண் டாகப் பெறின். | |
| 989 | ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு |
| ஆழி எனப்படு வார். | |
| 990 | சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான் |
| தாங்காது மன்னோ பொறை. | |
| 2.4.5 பண்புடைமை | |
| 991 | எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும் |
| பண்புடைமை என்னும் வழக்கு. | |
| 992 | அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும் |
| பண்புடைமை என்னும் வழக்கு. | |
| 993 | உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க |
| பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு. | |
| 994 | யனொடு நன்றி புரிந்த பயனுடையார் |
| பண்புபா ராட்டும் உலகு. | |
| 995 | நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும் |
| பண்புள பாடறிவார் மாட்டு. | |
| 996 | பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல் |
| மண்புக்கு மாய்வது மன். | |
| 997 | அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர் |
| மக்கட்பண்பு இல்லா தவர். | |
| 998 | நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும் |
| பண்பாற்றார் ஆதல் கடை. | |
| 999 | நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம் |
| பகலும்பாற் பட்டன்று இருள். | |
| 1000 | ண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால் |
| கலந்தீமை யால்திரிந் தற்று. | |
| 2.4.6 நன்றியில்செல்வம் | |
| 1001 | வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான் |
| செத்தான் செயக்கிடந்தது இல். | |
| 1002 | பொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும் |
| மருளானாம் மாணாப் பிறப்பு | |
| 1003 | ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர் |
| தோற்றம் நிலக்குப் பொறை. | |
| 1004 | எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால் |
| நச்சப் படாஅ தவன். | |
| 1005 | கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய |
| கோடியுண் டாயினும் இல். | |
| 1006 | ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று |
| ஈதல் இயல்பிலா தான். | |
| 1007 | அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம் |
| பெற்றாள் தமியள்மூத் தற்று. | |
| 1008 | நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள் |
| நச்சு மரம்பழுத் தற்று. | |
| 1009 | அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய |
| ஒண்பொருள் கொள்வார் பிறர். | |
| 1010 | சீருடைச் செல்வர் சிறுதுனி மார |
| வறங்கூர்ந் தனையது உடைத்து. | |
| 2.4.7 நாணுடைமை | |
| 1011 | கருமத்தால் நாணுதல் நாணுந் திருநுதல் |
| நல்லவர் நாணுப் பிற. | |
| 1012 | ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல |
| நாணுடைமை மாந்தர் சிறப்பு. | |
| 1013 | ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும் |
| நன்மை குறித்தது சால்பு. | |
| 1014 | அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல் |
| பிணிஅன்றோ பீடு நடை. | |
| 1015 | பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு |
| உறைபதி என்னும் உலகு. | |
| 1016 | நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம் |
| பேணலர் மேலா யவர். | |
| 1017 | நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால் |
| நாண்துறவார் நாணாள் பவர். | |
| 1018 | பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின் |
| அறம்நாணத் தக்கது உடைத்து. | |
| 1019 | குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும் |
| நாணின்மை நின்றக் கடை. | |
| 1020 | நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை |
| நாணால் உயிர்மருட்டி அற்று. | |
| 2.4.8 குடிசெயல்வகை | |
| 1021 | கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும் |
| பெருமையின் பீடுடையது இல். | |
| 1022 | ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின் |
| நீள்வினையால் நீளும் குடி. | |
| 1023 | குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் |
| மடிதற்றுத் தான்முந் துறும். | |
| 1024 | சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத் |
| தாழாது உஞற்று பவர்க்கு. | |
| 1025 | குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச் |
| சுற்றமாச் சுற்றும் உலகு. | |
| 1026 | நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த |
| இல்லாண்மை ஆக்கிக் கொளல். | |
| 1027 | அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும் |
| ஆற்றுவார் மேற்றே பொறை. | |
| 1028 | குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து |
| மானங் கருதக் கெடும். | |
| 1029 | இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக் |
| குற்ற மறைப்பான் உடம்பு. | |
| 1030 | இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும் |
| நல்லாள் இலாத குடி. | |
| 2.4.9 உழவு | |
| 1031 | சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் |
| உழந்தும் உழவே தலை. | |
| 1032 | உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது |
| எழுவாரை எல்லாம் பொறுத்து. | |
| 1033 | உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் |
| தொழுதுண்டு பின்செல் பவர். | |
| 1034 | பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர் |
| அலகுடை நீழ லவர். | |
| 1035 | இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது |
| கைசெய்தூண் மாலை யவர். | |
| 1036 | உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம் |
| விட்டேம்என் பார்க்கும் நிலை. | |
| 1037 | தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும் |
| வேண்டாது சாலப் படும். | |
| 1038 | ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின் |
| நீரினும் நன்றதன் காப்பு. | |
| 1039 | செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து |
| இல்லாளின் ஊடி விடும். | |
| 1040 | இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின் |
| நிலமென்னும் நல்லாள் நகும். | |
| 2.4.10 நல்குரவு | |
| 1041 | இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின் |
| இன்மையே இன்னா தது. | |
| 1042 | இன்மை எனவொரு பாவி மறுமையும் |
| இம்மையும் இன்றி வரும். | |
| 1043 | தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக |
| நல்குரவு என்னும் நசை. | |
| 1044 | இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த |
| சொற்பிறக்கும் சோர்வு தரும். | |
| 1045 | நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத் |
| துன்பங்கள் சென்று படும். | |
| 1046 | நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார் |
| சொற்பொருள் சோர்வு படும். | |
| 1047 | அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும் |
| பிறன்போல நோக்கப் படும். | |
| 1048 | இன்றும் வருவது கொல்லோ நெருநலும் |
| கொன்றது போலும் நிரப்பு. | |
| 1049 | நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள் |
| யாதொன்றும் கண்பாடு அரிது. | |
| 1050 | துப்புர வில்லார் துவரத் துறவாமை |
| உப்பிற்கும் காடிக்கும் கூற்று. | |
| 2.4.11 இரவு | |
| 1051 | இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின் |
| அவர்பழி தம்பழி அன்று. | |
| 1052 | இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை |
| துன்பம் உறாஅ வரின். | |
| 1053 | கரப்பிலா நெஞ்ின் கடனறிவார் முன்நின்று |
| இரப்புமோ ரேஎர் உடைத்து. | |
| 1054 | இரத்தலும் ஈதலே போலும் கரத்தல் |
| கனவிலும் தேற்றாதார் மாட்டு. | |
| 1055 | கரப்பிலார் வையகத்து உண்மையால் கண்ணின்று |
| இரப்பவர் மேற்கொள் வது. | |
| 1056 | கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை |
| எல்லாம் ஒருங்கு கெடும். | |
| 1057 | இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம் |
| உள்ளுள் உவப்பது உடைத்து. | |
| 1058 | இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம் |
| மரப்பாவை சென்றுவந் தற்று. | |
| 1059 | ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள் |
| மேவார் இலாஅக் கடை. | |
| 1060 | இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை |
| தானேயும் சாலும் கரி. | |
| 2.4.12 இரவச்சம் | |
| 1061 | கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும் |
| இரவாமை கோடி உறும். | |
| 1062 | இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து |
| கெடுக உலகியற்றி யான். | |
| 1063 | இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும் |
| வன்மையின் வன்பாட்ட தில். | |
| 1064 | இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக் |
| காலும் இரவொல்லாச் சால்பு. | |
| 1065 | தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது |
| உண்ணலின் ஊங்கினிய தில். | |
| 1066 | ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு |
| இரவின் இளிவந்த தில். | |
| 1067 | இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின் |
| கரப்பார் இரவன்மின் என்று. | |
| 1068 | இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும் |
| பார்தாக்கப் பக்கு விடும். | |
| 1069 | இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள |
| உள்ளதூஉம் இன்றிக் கெடும். | |
| 1070 | கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர் |
| சொல்லாடப் போஒம் உயிர். | |
| 2.4.13 கயமை | |
| 1071 | மக்களே போல்வர் கயவர் அவரன்ன |
| ஒப்பாரி யாங்கண்ட தில். | |
| 1072 | நன்றறி வாரிற் கயவர் திருவுடையர் |
| நெஞ்சத்து அவலம் இலர். | |
| 1073 | தேவர் அனையர் கயவர் அவருந்தாம் |
| மேவன செய்தொழுக லான். | |
| 1074 | அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரன் |
| மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ். | |
| 1075 | அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம் |
| அவாவுண்டேல் உண்டாம் சிறிது. | |
| 1076 | அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட |
| மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான். | |
| 1077 | ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும் |
| கூன்கையர் அல்லா தவர்க்கு. | |
| 1078 | சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல் |
| கொல்லப் பயன்படும் கீழ். | |
| 1079 | உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல் |
| வடுக்காண வற்றாகும் கீழ். | |
| 1080 | எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால் |
| விற்றற்கு உரியர் விரைந்து. | |
| 3. காமத்துப்பால் | |
| 3.1 களவியல் | |
| 3.1.1 தகையணங்குறுத்தல் | |
| 1081 | அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை |
| மாதர்கொல் மாலும் என் நெஞ்சு. | |
| 1082 | நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு |
| தானைக்கொண் டன்ன துடைத்து. | |
| 1083 | பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன் |
| பெண்டகையால் பேரமர்க் கட்டு. | |
| 1084 | கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப் |
| பேதைக்கு அமர்த்தன கண். | |
| 1085 | கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல் |
| நோக்கமிம் மூன்றும் உடைத்து. | |
| 1086 | கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர் |
| செய்யல மன்இவள் கண். | |
| 1087 | கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர் |
| படாஅ முலைமேல் துகில். | |
| 1088 | ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள் |
| நண்ணாரும் உட்குமென் பீடு. | |
| 1089 | பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு |
| அணியெவனோ ஏதில தந்து. | |
| 1090 | உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல் |
| கண்டார் மகிழ்செய்தல் இன்று. | |
| 3.1.2 குறிப்பறிதல் | |
| 1091 | இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு |
| நோய்நோக்கொன் றந்நோய் மருந்து. | |
| 1092 | கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில் |
| செம்பாகம் அன்று பெரிது. | |
| 1093 | நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள் |
| யாப்பினுள் அட்டிய நீர். | |
| 1094 | யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால் |
| தான்நோக்கி மெல்ல நகும். | |
| 1095 | குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண் |
| சிறக்கணித்தாள் போல நகும் | |
| 1096 | உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல் |
| ஒல்லை உணரப் படும். | |
| 1097 | செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும் |
| உறாஅர்போன்று உற்றார் குறிப்பு. | |
| 1098 | அசையியற்கு உண்டாண்டோ ர் ஏஎர்யான் நோக்கப் |
| பசையினள் பைய நகும். | |
| 1099 | ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் |
| காதலார் கண்ணே உள. | |
| 1100 | கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் |
| என்ன பயனும் இல. | |
| 3.1.3 புணர்ச்சிமகிழ்தல் | |
| 1101 | கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் |
| ஒண்தொடி கண்ணே உள. | |
| 1102 | பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை |
| தன்நோய்க்குத் தானே மருந்து. | |
| 1103 | தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல் |
| தாமரைக் கண்ணான் உலகு. | |
| 1104 | நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும் |
| தீயாண்டுப் பெற்றாள் இவள்? | |
| 1105 | வேட் ட பொழுதின் அவையவை போலுமே |
| தோட் டார் கதுப்பினாள் தோள். | |
| 1106 | உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு |
| அமிழ்தின் இயன்றன தோள். | |
| 1107 | தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால் |
| அம்மா அரிவை முயக்கு. | |
| 1108 | வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை |
| போழப் படாஅ முயக்கு. | |
| 1109 | ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம் |
| கூடியார் பெற்ற பயன். | |
| 1110 | அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம் |
| செறிதோறும் சேயிழை மாட்டு. | |
| 3.1.4 நலம்புனைந்துரைத்தல் | |
| 1111 | நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும் |
| மென்னீரள் யாம்வீழ் பவள். | |
| 1112 | மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண் |
| பலர்காணும் பூவொக்கும் என்று. | |
| 1113 | முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம் |
| வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு. | |
| 1114 | காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும் |
| மாணிழை கண்ணொவ்வேம் என்று. | |
| 1115 | அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு |
| நல்ல படாஅ பறை. | |
| 1116 | மதியும் மடந்தை முகனும் அறியா |
| பதியின் கலங்கிய மீன். | |
| 1117 | அறுவாய் நிறைந்த அவிர்மத க்குப் போல |
| மறுவுண்டோ மாதர் முகத்து. | |
| 1118 | மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல் |
| காதலை வாழி மத. | |
| 1119 | மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின் |
| பலர்காணத் தோன்றல் மதி. | |
| 1120 | அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் |
| அடிக்கு நெருஞ்சிப் பழம். | |
| 3.1.5 காதற்சிறப்புரைத்தல் | |
| 1121 | பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி |
| வாலெயிறு ஊறிய நீர். | |
| 1122 | உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன |
| மடந்தையொடு எம்மிடை நட்பு. | |
| 1123 | கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும் |
| திருநுதற்கு இல்லை இடம். | |
| 1124 | வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல் |
| அதற்கன்னள் நீங்கும் இடத்து. | |
| 1125 | உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன் |
| ஒள்ளமர்க் கண்ணாள் குணம். | |
| 1126 | கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருகுவரா |
| நுண்ணியர்எம் காத லவர். | |
| 1127 | கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும் |
| எழுதேம் கரப்பாக்கு அறிந்து. | |
| 1128 | நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல் |
| அஞ்சுதும் வேபாக் கறிந்து. | |
| 1129 | இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே |
| ஏதிலர் என்னும் இவ் வூர். | |
| 1130 | உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர் |
| ஏதிலர் என்னும் இவ் வூர். | |
| 3.1.6 நாணுத்துறவுரைத்தல் | |
| 1131 | காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம் |
| மடலல்லது இல்லை வலி. | |
| 1132 | நோனா உடம்பும் உயிரும் மடலேறும் |
| நாணினை நீக்கி நிறுத்து. | |
| 1133 | நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன் |
| காமுற்றார் ஏறும் மடல். | |
| 1134 | காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு |
| நல்லாண்மை என்னும் புணை. | |
| 1135 | தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு |
| மாலை உழக்கும் துயர். | |
| 1136 | மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற |
| படல்ஒல்லா பேதைக்கென் கண். | |
| 1137 | கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப் |
| பெண்ணின் பெருந்தக்க தில். | |
| 1138 | நிறையரியர் மன்அளியர் என்னாது காமம் |
| மறையிறந்து மன்று படும். | |
| 1139 | அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம் |
| மறுகின் மறுகும் மருண்டு. | |
| 1140 | யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார் |
| யாம்பட்ட தாம்படா ஆறு. | |
| 3.1.7 அலரறிவுறுத்தல் | |
| 1141 | அலரெழ ஆருயிர் நற்கும் அதனைப் |
| பலரறியார் பாக்கியத் தால். | |
| 1142 | மலரன்ன கண்ணாள் அருமை அறியாது |
| அலரெமக்கு ஈந்ததிவ் வூர். | |
| 1143 | உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப் |
| பெறாஅது பெற்றன்ன நீர்த்து. | |
| 1144 | கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல் |
| தவ்வென்னும் தன்மை இழந்து. | |
| 1145 | களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம் |
| வெளிப்படுந் தோறும் இனிது. | |
| 1146 | கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும் |
| திங்களைப் பாம்புகொண் டற்று. | |
| 1147 | ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல் |
| நீராக நீளும்இந் நோய். | |
| 1148 | நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால் |
| காமம் நுதுப்பேம் எனல். | |
| 1149 | அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார் |
| பலர்நாண நீத்தக் கடை. | |
| 1150 | தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும் |
| கெளவை எடுக்கும்இவ் வூர். | |
| 3.2 கற்பியல் | |
| 3.2..1 பிரிவாற்றாமை | |
| 1151 | செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின் |
| வல்வரவு வாழ்வார்க் குரை. | |
| 1152 | இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும் |
| புன்கண் உடைத்தால் புணர்வு. | |
| 1153 | அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும் |
| பிரிவோ ரிடத்துண்மை யான். | |
| 1154 | அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல் |
| தேறியார்க்கு உண்டோ தவறு. | |
| 1155 | ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர் |
| நீங்கின் அரிதால் புணர்வு. | |
| 1156 | பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர் |
| நல்குவர் என்னும் நசை. | |
| 1157 | துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை |
| இறைஇறவா நின்ற வளை. | |
| 1158 | இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும் |
| இன்னாது இனியார்ப் பிரிவு. | |
| 1159 | தொடிற்சுடின் அல்லது காமநோய் போல |
| விடிற்சுடல் ஆற்றுமோ தீ. | |
| 1160 | அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப் |
| பின்இருந்து வாழ்வார் பலர். | |
| 3.2.2 படர்மெலிந்திரங்கல் | |
| 1161 | மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு |
| ஊற்றுநீர் போல மிகும். | |
| 1162 | கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு |
| உரைத்தலும் நாணுத் தரும். | |
| 1163 | காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என் |
| நோனா உடம்பின் அகத்து. | |
| 1164 | காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும் |
| ஏமப் புணைமன்னும் இல். | |
| 1165 | துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு |
| நட்பினுள் ஆற்று பவர். | |
| 1166 | இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால் |
| துன்பம் அதனிற் பெரிது. | |
| 1167 | காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன் |
| யாமத்தும் யானே உளேன். | |
| 1168 | மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா |
| என்னல்லது இல்லை துணை. | |
| 1169 | > கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள் |
| நெடிய கழியும் இரா. | |
| 1170 | உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர் |
| நீந்தல மன்னோஎன் கண். | |
| 3.2.3 கண்விதுப்பழிதல் | |
| 1171 | கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய் |
| தாம்காட்ட யாம்கண் டது. | |
| 1172 | தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப் |
| பைதல் உழப்பது எவன்? | |
| 1173 | கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும் |
| இதுநகத் தக்க துடைத்து. | |
| 1174 | பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா |
| உய்வில்நோய் என்கண் நிறுத்து. | |
| 1175 | படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக் |
| காநோய் செய்தஎன் கண். | |
| 1176 | ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண் |
| தாஅம் இதற்பட் டது. | |
| 1177 | உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து |
| வேண்டி அவர்க்கண்ட கண். | |
| 1178 | பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க் |
| காணாது அமைவில கண். | |
| 1179 | வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை |
| ஆரஞர் உற்றன கண். | |
| 1180 | மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல் |
| அறைபறை கண்ணார் அகத்து. | |
| 3.2.4 பசப்புறுபருவரல் | |
| 1181 | நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென் |
| பண்பியார்க்கு உரைக்கோ பிற. | |
| 1182 | அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென் |
| மேனிமேல் ஊரும் பசப்பு. | |
| 1183 | சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா |
| நோயும் பசலையும் தந்து. | |
| 1184 | உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால் |
| கள்ளம் பிறவோ பசப்பு. | |
| 1185 | உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என் |
| மேனி பசப்பூர் வது. | |
| 1186 | விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன் |
| முயக்கற்றம் பார்க்கும் பசப்பு. | |
| 1187 | புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில் |
| அள்ளிக்கொள் வற்றே பசப்பு. | |
| 1188 | பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத் |
| துறந்தார் அவர்என்பார் இல். | |
| 1189 | பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார் |
| நன்னிலையர் ஆவர் எனின். | |
| 1190 | பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார் |
| நல்காமை தூற்றார் எனின். | |
| 3.2.5 தனிப்படர்மிகுதி | |
| 1191 | தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே |
| காமத்துக் காழில் கனி. | |
| 1192 | வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு |
| வீழ்வார் அள க்கும் அளி. | |
| 1193 | வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே |
| வாழுநம் என்னும் செருக்கு. | |
| 1194 | வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார் |
| வீழப் படாஅர் எனின். | |
| 1195 | நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ |
| தாம்காதல் கொள்ளாக் கடை. | |
| 1196 | ஒருதலையான் இன்னாது காமம்காப் போல |
| இருதலை யானும் இனிது. | |
| 1197 | பருவரலும் பைதலும் காணான்கொல் காமன் |
| ஒருவர்கண் நின்றொழுகு வான். | |
| 1198 | வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து |
| வாழ்வாரின் வன்கணார் இல். | |
| 1199 | நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு |
| இசையும் இனிய செவிக்கு. | |
| 1200 | உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச் |
| செறாஅஅய் வாழிய நெஞ்சு. | |
| 3.2.6 நினைந்தவர்புலம்பல் | |
| 1201 | உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால் |
| கள்ளினும் காமம் இனிது. | |
| 1202 | எனைத்தொனறு ஏனிதேகாண் காமம்தாம் வீழ்வார் |
| நினைப்ப வருவதொன்று ஏல். | |
| 1203 | நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல் |
| சினைப்பது போன்று கெடும். | |
| 1204 | யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து |
| ஓஒ உளரே அவர். | |
| 1205 | தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல் |
| எம்நெஞ்சத்து ஓவா வரல். | |
| 1206 | மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடி யான் |
| உற்றநாள் உள்ள உளேன். | |
| 1207 | மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன் |
| உள்ளினும் உள்ளம் சுடும். | |
| 1208 | எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ |
| காதலர் செய்யும் சிறப்பு. | |
| 1209 | விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார் |
| அளியின்மை ஆற்ற நினைந்து. | |
| 1210 | விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப் |
| படாஅதி வாழி மதி. | |
| 3.2.7 கனவுநிலையுரைத்தல் | |
| 1211 | காதலர் தூதொடு வந்த கனவினுக்கு |
| யாதுசெய் வேன்கொல் விருந்து. | |
| 1212 | கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு |
| உயலுண்மை சாற்றுவேன் மன். | |
| 1213 | நனவினால் நல்கா தவரைக் கனவினால் |
| காண்டலின் உண்டென் உயிர். | |
| 1214 | கனவினான் உண்டாகும் காமம் நனவினான் |
| நல்காரை நாடித் தரற்கு. | |
| 1215 | நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான் |
| கண்ட பொழுதே இனிது. | |
| 1216 | நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால் |
| காதலர் நீங்கலர் மன். | |
| 1217 | நனவினால் நல்காக் கொடியார் கனவனால் |
| என்எம்மைப் பீழிப் பது. | |
| 1218 | துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால் |
| நெஞ்சத்தர் ஆவர் விரைந்து. | |
| 1219 | நனவினால் நல்காரை நோவர் கனவினால் |
| காதலர்க் காணா தவர். | |
| 1220 | நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால் |
| காணார்கொல் இவ்வூ ரவர். | |
| 3.2.8 பொழுதுகண்டிரங்கல் | |
| 1221 | மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும் |
| வேலைநீ வாழி பொழுது. | |
| 1222 | புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல் |
| வன்கண்ண தோநின் துணை. | |
| 1223 | பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித் |
| துன்பம் வளர வரும். | |
| 1224 | காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து |
| ஏதிலர் போல வரும். | |
| 1225 | காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான் |
| மாலைக்குச் செய்த பகை? | |
| 1226 | மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத |
| காலை அறிந்த திலேன். | |
| 1227 | காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி |
| மாலை மலரும்இந் நோய். | |
| 1228 | அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன் |
| குழல்போலும் கொல்லும் படை. | |
| 1229 | பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு |
| மாலை படர்தரும் போழ்து. | |
| 1230 | பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை |
| மாயும்என் மாயா உயிர். | |
| 3..2. 9 உறுப்புநலனழிதல் | |
| 1231 | சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி |
| நறுமலர் நாணின கண். | |
| 1232 | நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும் |
| பசந்து பனிவாரும் கண். | |
| 1233 | தணந்தமை சால அறிவிப்ப போலும் |
| மணந்தநாள் வீங்கிய தோள். | |
| 1234 | பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித் |
| தொல்கவின் வாடிய தோள். | |
| 1235 | கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு |
| தொல்கவின் வாடிய தோள். | |
| 1236 | தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக் |
| கொடியர் எனக்கூறல் நொந்து. | |
| 1237 | பாடுபெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென் |
| வாடுதோட் பூசல் உரைத்து. | |
| 1238 | முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது |
| பைந்தொடிப் பேதை நுதல். | |
| 1239 | முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற |
| பேதை பெருமழைக் கண். | |
| 1240 | கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே |
| ஒண்ணுதல் செய்தது கண்டு. | |
| 3.2.10 நெஞ்சொடுகிளத்தல் | |
| 1241 | நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும் |
| எவ்வநோய் தீர்க்கும் மருந்து. | |
| 1242 | காதல் அவரிலர் ஆகநீ நோவது |
| பேதைமை வாழியென் நெஞ்சு. | |
| 1243 | இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல் |
| பைதல்நோய் செய்தார்கண் இல். | |
| 1244 | கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத் |
| தின்னும் அவர்க்காணல் உற்று. | |
| 1245 | செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம் |
| உற்றால் உறாஅ தவர். | |
| 1246 | கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய் |
| பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு. | |
| 1247 | காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே |
| யானோ பொறேன்இவ் விரண்டு. | |
| 1248 | பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர் |
| பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு. | |
| 1249 | உள்ளத்தார் காத லவரால் உள்ளிநீ |
| யாருழைச் சேறியென் நெஞ்சு. | |
| 1250 | துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா |
| இன்னும் இழத்தும் கவின். | |
| 3.2.11 நிறையழிதல் | |
| 1251 | காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும் |
| நாணுத்தாழ் வீழ்த்த கதவு. | |
| 1252 | காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை |
| யாமத்தும் ஆளும் தொழில். | |
| 1253 | மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித் |
| தும்மல்போல் தோன்றி விடும். | |
| 1254 | நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம் |
| மறையிறந்து மன்று படும். | |
| 1255 | செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய் |
| உற்றார் அறிவதொன்று அன்று. | |
| 1256 | செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ |
| எற்றென்னை உற்ற துயர். | |
| 1257 | நாணென ஒன்றோ அறியலம் காமத்தால் |
| பேணியார் பெட்ப செயின். | |
| 1258 | பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம் |
| பெண்மை உடைக்கும் படை. | |
| 1259 | புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ் சம் |
| கலத்தல் உறுவது கண்டு. | |
| 1260 | நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ |
| புணரந்தூடி நிற்பேம் எனல். | |
| 3.2.12 அவர்வயின்விதும்பல் | |
| 1261 | வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற |
| நாளொற்றித் தேய்ந்த விரல். | |
| 1262 | இலங்கிழாய் இன்று மறப்பின்என் தோள்மேல் |
| கலங்கழியும் காரிகை நீத்து. | |
| 1263 | உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார் |
| வரல்நசைஇ இன்னும் உளேன். | |
| 1264 | கூடிய காமம் பிரந்தார் வரவுள்ளிக் |
| கோடுகொ டேறுமென் நெஞ்சு. | |
| 1265 | காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின் |
| நீங்கும்என் மென்தோள் பசப்பு. | |
| 1266 | வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன் |
| பைதல்நோய் எல்லாம் கெட. | |
| 1267 | புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல் |
| கண்அன்ன கேளிர் விரன். | |
| 1268 | வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து |
| மாலை அயர்கம் விருந்து. | |
| 1269 | ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார் |
| வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு. | |
| 1270 | பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம் |
| உள்ளம் உடைந்துக்கக் கால். | |
| 3.2.13 குறிப்பறிவுறுத்தல் | |
| 1271 | கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண் |
| உரைக்கல் உறுவதொன் றுண்டு. | |
| 1272 | கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப் |
| பெண்நிறைந்த நீர்மை பெரிது. | |
| 1273 | மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை |
| அணியில் திகழ்வதொன்று உண்டு. | |
| 1274 | முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை |
| நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு. | |
| 1275 | செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர் |
| தீர்க்கும் மருந்தொன்று உடைத்து. | |
| 1276 | பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி |
| அன்பின்மை சூழ்வ துடைத்து. | |
| 1277 | தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும் |
| முன்னம் உணர்ந்த வளை. | |
| 1278 | நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும் |
| எழுநாளேம் மேனி பசந்து. | |
| 1279 | தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி |
| அஃதாண் டவள்செய் தது. | |
| 1280 | பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால் |
| காமநோய் சொல்லி இரவு. | |
| 3.2.14 புணர்ச்சிவிதும்பல் | |
| 1281 | உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் |
| கள்ளுக்கில் காமத்திற் குண்டு. | |
| 1282 | தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத் துணையும் |
| காமம் நிறைய வரின். | |
| 1283 | பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக் |
| காணா தமையல கண். | |
| 1284 | ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து |
| கூடற்கண் சென்றது என் னெஞ்சு. | |
| 1285 | எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன் |
| பழிகாணேன் கண்ட இடத்து. | |
| 1286 | காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால் |
| காணேன் தவறல் லவை. | |
| 1287 | உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல் |
| பொய்த்தல் அறிந்தென் புலந்து. | |
| 1288 | இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக் |
| கள்ளற்றே கள்வநின் மார்பு. | |
| 1289 | மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன் |
| செவ்வி தலைப்படு வார். | |
| 1290 | கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல் |
| என்னினும் தான்விதுப் புற்று. | |
| 3.2.15 நெஞ்சொடுபுலத்தல் | |
| 1291 | அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே |
| நீஎமக்கு ஆகா தது. | |
| 1292 | உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச் |
| செறாஅரெனச் சேறியென் நெஞ்சு. | |
| 1293 | கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ |
| பெட்டாங்கு அவர்பின் செலல். | |
| 1294 | இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே |
| துனிசெய்து துவ்வாய்காண் மற்று. | |
| 1295 | பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும் |
| அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு. | |
| 1296 | தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத் |
| தினிய இருந்ததென் நெஞ்சு. | |
| 1297 | நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன் |
| மாணா மடநெஞ்சிற் பட்டு. | |
| 1298 | எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம் |
| உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு. | |
| 1299 | துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய |
| நெஞ்சந் துணையல் வழி. | |
| 1300 | தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய |
| நெஞ்சம் தமரல் வழி. | |
| 3.2.16 புலவி | |
| 1301 | புல்லா திராஅப் புலத்தை அவர் உறும் |
| அல்லல்நோய் காண்கம் சிறிது. | |
| 1302 | உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது |
| மிக்கற்றால் நீள விடல். | |
| 1303 | அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப் |
| புலந்தாரைப் புல்லா விடல். | |
| 1304 | ஊடி யவரை உணராமை வாடிய |
| வள்ளி முதலரிந் தற்று. | |
| 1305 | நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை |
| பூஅன்ன கண்ணார் அகத்து. | |
| 1306 | துனியும் புலவியும் இல்லாயின் காமம் |
| கனியும் கருக்காயும் அற்று. | |
| 1307 | ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது |
| நீடுவ தன்று கொல் என்று. | |
| 1308 | நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும் |
| காதலர் இல்லா வழி. | |
| 1309 | நீரும் நிழலது இனிதே புலவியும் |
| வீழுநர் கண்ணே இனிது. | |
| 1310 | ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம் |
| கூடுவேம் என்பது அவா. | |
| 3.2.17 புலவி நுணுக்கம் | |
| 1311 | பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர் |
| நண்ணேன் பரத்தநின் மார்பு. | |
| 1312 | ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை |
| நீடுவாழ் கென்பாக் கறிந்து. | |
| 1313 | கோட்டுப் பூச் சூடினும் காயும் ஒருத்தியைக் |
| காட்டிய சூடினீர் என்று. | |
| 1314 | யாரினும் காதலம் என்றேனா ஊடினாள் |
| யாரினும் யாரினும் என்று. | |
| 1315 | இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக் |
| கண்நிறை நீர்கொண் டனள். | |
| 1316 | உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப் |
| புல்லாள் புலத்தக் கனள். | |
| 1317 | வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள் |
| யாருள்ளித் தும்மினீர் என்று. | |
| 1318 | தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல் |
| எம்மை மறைத்திரோ என்று. | |
| 1319 | தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர் |
| இந்நீரர் ஆகுதிர் என்று. | |
| 1320 | நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர் |
| யாருள்ளி நோக்கினீர் என்று. | |
| 3.2.18 ஊடலுவகை | |
| 1321 | இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல் |
| வல்லது அவர்அளக்கு மாறு. | |
| 1322 | ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி |
| வாடினும் பாடு பெறும். | |
| 1323 | புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு |
| நீரியைந் தன்னார் அகத்து. | |
| 1324 | புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென் |
| உள்ளம் உடைக்கும் படை. | |
| 1325 | தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள் |
| அகறலின் ஆங்கொன் றுடைத்து. | |
| 1326 | உணலினும் உண்டது அறல்இனிது காமம் |
| புணர்தலின் ஊடல் இனிது. | |
| 1327 | ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும் |
| கூடலிற் காணப் படும். | |
| 1328 | ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக் |
| கூடலில் தோன்றிய உப்பு. | |
| 1329 | ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப |
| நீடுக மன்னோ இரா. | |
| 1330 | ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் |
| கூடி முயங்கப் பெறின். | |
Friday, April 8, 2016
திருக்குறள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment