27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்,
யோகங்கள் மொத்தம் 27ஆகும்.
யோகம் என்பது வானத்தில் (ஆகா
யத்தில்) ஒரு
குறிப்பிட்ட இடத்திலிருந்து சூரியனும், சந்திரனும்
செல்லுகின்ற மொத்த தூரமாகும்.
இந்த 27 யோகங்களும்கூட
முகூர்த்தம் எனும் நற்காரியங்கள் செய்வதற்கான நாள் தேர்வு செய்ய கிழமை, நட்சத்திரம்,
திதி ஆகியவைப் போன் றே பயன்படும் நான்காவது அமைப் பாகும். பஞ்சாங்கம்
எனும் பஞ்ச (ஐந்து)
அங்கங்களில் நான்காவது அமை ப்பான இதை அநேகர் கண்டு கொள்வதே இல்லை. ஜாதக
குறிப்பில் ஜனன வாக்கியத்தில் பலர் இதையும் சேர்த்து குறிப்பி ட்டாலும், முகூர்த்த
அடிப்படை யில் நல்ல நாள் தேர்வு செய்யும்போது நான்காவதான இந்த நித்திய நாம யோகமும் அடங்கும் என்பதை மறந்து விடுகி ன்றார்கள்.
திதி – நட்சத்திரங்களைப்
போன்றே நித்திய நாம யோகத்தில் பிறந்த பலரும்கூட மூல நூல்களில் கொடுக்கப்பட்டுள்ளது. அதையும்
பயன் படுத்திக் கொள்வது சிறப்பாகும்.
27 வகையான யோகங்கள்
1. விஷ்கம்பம் (விஷ்
யோகம்), 2. ப்ரீதி
(ப்ரீ யோகம்), 3. ஆயுஷ்மான்
(ஆயு யோகம்), 4. செளபாக்யம்
(செள யோகம்), 5. சோபனம்
(சோ யோகம்), 6. அதிகண்டம்
(அதி யோகம்), 7. சுகர்மம்
(சுக யோகம்), 8. திருதி
(திரு யோகம்), 9. சூலம்
(சூல யோகம்), 10. கண்டம்
(கண் யோகம்), 11. விருத்தி
(விரு யோகம்), 12. துருவம்
(துரு யோகம்), 13. வ்யாகதம்
(வ்யா யோகம்), 14. ஹர்ஷணம்
(ஹர் யோகம்), 15. வஜ்ரம்
(வஜ் யோகம்), 16. சித்தி
(சித் யோகம்), 17. வியதீபாதம்
(விய யோகம்), 18. வரீயான்
(வரீ யோகம்), 19. பரிகம்
(பரி யோகம்), 20. சிவம்
(சிவ யோகம்), 21. சித்தம்
(சித் யோகம்), 22. சாத்தியம்
(சாத் யோகம்), 23. சுபம்
(சுப யோகம்), 24. சுப்பிரம்
(சுப் யோகம்), 25. பிராம்மியம்
(பிரா யோகம்), 26. ஐந்திரம்
(ஐந் யோகம்), 27. வைதிருதி
(வை யோகம்)
இந்த 27 வகையான
யோகங்களை பற்றி ஒவ்வொன்றாக பார்ப்போம்.
1. விஷ்கம்பம் (விஷ்
யோகம்):-
இது அசுப யோகமாகும்.இந்த யோகத்தில் பிறந்தவர்கள் எதிரியை வெற்றிகொள்வார்கள். உடல்
உறவு சுகத்தில் அதிகமான விருப் பம் உடையவர்களாக வும், எந்த
நேரத்தி லும் உடல் உறவு கொள்ள துடிப்பவ ர்களாகவும் இருப்பார் கள். மற்ற
வர்களை சட்டென்று அறிந்து கொள்வதுடன் பின்னால் நடக்கப்போவ தை முன் கூட்டி யே உணரும் தீர்க்க தரிசனம் இருக் கும். மாந்திரீக
விஷய ங்களில் நாட்டமிருக்கும். எவருக்கும்
கட்டு ப்படாத தன்னிச்சையான சுதந்திரப்பிரியர்கள், சுற்றங்களை
மதி ப்பார்கள். எவரிடமும்
ஏமாறாத வராக இருப்பார்.
2. ப்ரீதி (ப்ரீ யோகம்):-
இது சுபமான யோகமாகும். இதில்
பிறப்பவர்கள் இனிய சொல் பேசுப வராகவும், நல்ல
செயல்களை யும் செய்பவர்களாகவும் இருப்பார்கள். பெரியோ
ர்கள், ஞானிகள்,
மகான்கள், குரு
ஆகி யோர்களை மதிப்பவரா கவும் அவர்களை வணங்குபவராகவு ம் இருப்பார்கள். உறுதியான
மனமும், செயல்
பாட்டுத் திறமையும் இருக்கும். கடவுள்
பக்தி அதிக முள்ளவர். அனை
வரையும் அரவணைத்துச் செல்பவர் தான். காம
இச்சை சற்று அதிகம் இரு க்கும் நற்குணமுடை ய இவர்கள் நல்ல வாழ்க்கை வாழ்வார்கள்.
3. ஆயுஷ்மான் (ஆயு
யோகம்):-
இது சுப யோகமாகும். பெரியவர்கள்,
மகான்கள், ஞானி
– யோகிகள் “ஆயுஷ்மான்
பவ” என்று
இந்த யோகத்தின் பெயரால் வாழ்த்துவது உண்டு. “ஆயுஷ்மான்
பவ” என்றால்
நீடுழி பல்லாண்டு வாழ்க என்று பொருளாகும். அதற்
கேற்ப இந்த யோகத்தில் பிறந்தவர்கள் நீண்ட ஆயுளுடன் நல்ல வசதி யாக வாழ்வார்கள். அனைவ
ரையும் மதிப்பவர்கள், பக்திமான்
களாக தெய்வ காரியங்கள் செய்வார்கள். கால்
நடைச் செல்வ ங்கள் உடையவர்க ளாக இருப்பார்கள்.
4. செளபாக்யம் (செள
யோகம்):-
பெயரே செளபாக்யம் எனும் போது இவர்களின் சுக செளக்யம் நன் றாகவே இருக்கும். இதுவும்
சுபமான யோகம் தான். இதில்
பிறந்த வர்கள் நல்ல செல்வாக்குடையவர்களாகவும், உறுதியான
மனம் உடைய செயல் திறன் மிக்கவ ர்களாகவும், நல்ல
பக்தி மான் களாகவும், ஈவு
இரக்கம் உடைய தர்ம வான்களாக இருப்பார்கள். பெரியோர்
களை மதிப்பவர்கள் என்பதுடன், சேவை
செய்யும் மனப்பான்மை யும் இருக்கும். உடல்
உறவு சுகத்தில் அதிக ஈடுபாடு இருக்கும். அழகை
ரசிப்பவர்கள்.
5. சோபனம் (சோ யோகம்):-
சுப யோகமான இதன் பொருள் இனிமையான சுகம் என்பதாகும். திரு
மணமாகி முதல் இரவுக்கு “சோபனம்”
என்று குறிப்பிடுவது ண்டு இதில் பிறந் தவர்கள் சுகமான இனிமையான வாழ் க்கையை விரும்பு வதுடன் “சோபனம்”
எனும் உடல் உறவுக் கல்வியில் தனி யாத விருப்பத்துடன், நிபுணர்களாகவும்
இருப்பார்கள். இவர்களின்
குறிக் கோளே மகிழ்ச்சியான வாழ்க்கை தான். கஷ்டத்தை
வெறுப்பவர்கள். சுற்றம்
நட்பை அதிகம் விரும்பு வார்கள். செல்வாக்குடை
யவர்கள் எனலாம்.
6. அதி கண்டம் (அதி
யோகம்):-
பெயரே கண்டம் என்று பயமுறுத்துகின்றது. அதிலும்
அதி கண் டம். எனவே
அடிக்கடி விபத்து கண்ட ங்கள் ஏற்படும். துன்பம்
தொல்லை கஷ்டம் தாக்கும். மற்றவர்களுக்கு
தொல்லைகளையும், பிரச்சினைக
ளையும், துன்பங்களையும்
ஏற்படுத்து வார்கள். பிறரை
துன்பப்படுத்தி அதில் மனம் மகிழ்ச்சியடைவார்கள். யான்
பெற்ற துன்பம் பெறுக வையகம் என்ற குறுகிய மனப்பான்மையுடையவர்க ளாக இருப்பதுண்டு. பேராசையும்,
முன் கோபமும், முரட்டுத்
தனமும், அலட்சியமும்,
சோம்பலும் இருக்கும். எதிலும்
அழுத்தமான நம்பிக்கை இல்லாத மேம்போக் கானவர்களாக இருப்பார்கள்.
7. சுகர்மம் (சுக
யோகம்):-
இது நல்லயோகம். இதில்
பிறந்தவர்கள் நல்ல செல்வாக்குடன், பேரும்
புகழும் பெற்று நல்ல வாழ்க்கை வாழக் கூடியவர்கள். பற்று,
பாசம், ஈகை
உடையவர் கள். நல்ல
பக்திமான்களாகவும், தெய்வ
காரிய ங்கள் செய்வதில், தீர்த்த
யாத்திரை மேற்கொ ள்வதில் விருப்பம் இருக்கும். நட்பு
சுற்றங்களை விரும்பி மதிப்பவர்களாக இருப்பார் கள்.
8. திருதி (திரு யோகம்):-
இது அசுப யோகம் தான் என்றாலும் சிலர் சுபயோகம் என்று கூறுகின்றார்கள். இதில்
பிறந்தவ ர்கள் வைராக்யமும், தன்னம்பிக்கை
உடை யவர்கள். எடுத்த
காரியத்தை விடாப் பிடியாக முடிக்கும் ஆற்றல் உடைய வர்கள். கொடுத்தவாக்கை
காப்பாற் றக் கூடியவர்கள். நல்ல
தைரியமும் உடையவர்கள். சாஸ்தி
ரங்களில் ஈடு பாடு இருப்ப துண்டு.
9. சூலம் (சூல யோகம்):-
இது அசுபமான யோகம். முன்கோபம்,
முரட்டுத்தனம், அலட்சியம்,
சோம்பல், எடுத்தெரிந்து
பேசும் குணம் இருக்கும். எவரையும்
மதிக்க மாட் டார்கள். எவருடனும்
ஒத்து போகாமல் முரண்டு பிடிப் பவர்கள். மற்றவர்களுக்கு
தொல் லை கொடுப்பதுடன் வீண் வம்பு, சண்டை
பிடிக்கவும் செய்வதுண் டு. உடல்
உறவு சுகத்தில் மிக அதிக மான ஆசை இருக்கும். கண்டபடி
அளவற்ற காமசுகம் அனுபவித்து அதனால் அவஸ்தைப்படுவதுண் டு.
10. கண்டம் (கண் யோகம்):-
இதுவும் அசுபமான யோகம் தான். கண்டம்
என்ற பெயரைப் போல இதில் பிறந்தவர்கள் அடிக்கடி கண் டங்களையும், துன்பங்களையும்,
உடல் நோய்த் துன்பங்களையும் சந்தி க்க வேண்டி வரும். நல்ல
எண்ண ங்களும் இருக்காது. செயல்பாடுக
ளும் சிறப்பாக இருக்காது. மற்றவ
ர்களுக்கு தீமைகள் செய்வார்கள். வஞ்சக
எண்ணம் இருக்கும். எவரை
யும் மதிக் காமல் தன்னிச்சையாக செயல் படுவார்கள். கர்வம்
அலட்சியம் இருக்கும்.
11. விருத்தி (விரு
யோகம்):-
செல்வாக்குடையவர்கள். நல்ல
அளவில் வசதியான வாழ்க்கை அமைப்பவர்கள். சாஸ்திர
நாட்ட மும், புலமையும்
உடையவர்களாக இருப் பதுடன், தெய்வ
பக்தியும், நற்
பண்பு களும் உள்ளவர்கள். ஈகை
தரும குணம் உடை யவர்களாகவும், தெய்வ
காரியங்கள் திருப்பணிகள் செய்பவர் களாக இருப் பார்கள். நல்ல
எண்ணம் செயல்பாடு டை யவர்கள் எனலாம். இது
சுபமான யோகமாகும்.
12. துருவம் (துரு யோகம்):-
இதில் பிறந்தவர்கள் தனிமையை விரும்பக் கூடியவர்களாக இருப்பதுடன் எதிலும் ஒட்டாமல் தாம ரை இலைத் தண்ணீர்போல பட்டும், படா
மலும் இருப்பார்கள். கபடமான
எண்ணம் உடையவர்கள். சமயம்
கிடைக்கும் போது பழிதீர்த்துக் கொள்ள தயங்க மாட்டார்கள். நல்ல
எண்ணம் இருக்காது. இது
அசுப மான யோகமாகும். சிலர்
இதையும் சுப யோகம் கூறுவதுண்டு. எனினும்
சுப காரியங்களுக்கு விலக்க ளிக்க வேண்டிய யோகம் தான்.
13. வ்யாகதம் (வ்யா
யோகம்):-
இதுவும் அசுபமான யோகம் தான். முன்கோபமும்,
முரட்டுத் தனமும் உடைய இவர்கள் சமுகத் தோடு ஒன்றிச் செல்லாமல், தன்னிச்
சையாக செயல்படக் கூடியவர்கள். நல்லெண்
ணம் இல்லாத இவர்கள் சூது வாது, கபடம்
உள்ளவர்களே எனலாம். மன
உறுதி இல்லாத இவர்கள் எண்ணங்க ளையும், செயல்களையும்
அடிக்கடி மாற்றிக் கொள்வார்கள். பழி
பாவத்துக்கு அஞ்சாதவர்கள் கெடுதல் செய்வார்கள்.
14. ஹர்ஷணம் (ஹர் யோகம்):-
இது சுபமான யோகமாகும். செல்வாக்கும்
– சொல்வாக்கும் உடை யவர்கள். இனிமையான
மென்மையா ன சுபாவம் கொண்டவர்கள். பின்னால்
வரு வதை முன்கூட்டியே யூகிக்கும் தீர்க்கத் தரிசிகளாக இருப் பதுண்டு. சுகமான
ஆடம்பரமான வாழ்க்கையை விரும்புவார்கள். உடல்
உறவு சுகத்தி ல் சற்று கூடுதலான அதிகமான ஈடு பாடுடை யவர்கள். தெய்வ
பக்தியும், உதவும்
மனப்பான்மையும் உள்ளவர்க ளே எனலாம்.
15. வஜ்ரம் (வஜ் யோகம்):-
இது சுபமான யோகமாகும். இதை
சிலர் அசுபமான யோகம் என்று கூறுகின்றார்கள். ஆனால்
இது சுப மான யோகம் தான். இதில்
பிறந்தவ ர்களுக்கு அசாத்தியமான மன உறுதி உடையவர்கள். எதற்கும்
அஞ்சாதவ ர்கள், கொள்கைப்
பிடிப் புள்ளவர்கள். எதையும்
சாதிப்பவர்கள். துணிச்சலும்,
தைரியமும் உள்ள இவர்களிடம் கனி வும் இருக்கும். உதவும்
மனப்பான்மை யும் உண்டு. நல்ல
தெய்வபக்தியும், பிறர்
மேல் மதிப்பு மரியாதையும் உள்ளவர்கள் தான் என்றாலும் தனக் கு தீங்கு செய்தவர்களை மறக்காமல் பழி தீர்த்து கொள்வார்கள்.
16. சித்தி (சித் யோகம்):-
சுபயோகமான இதில் பிறந்தவர்களுக்கு எதுவும் சிந்திக்கும் உபாச னா சக்தியுடையவர்கள். தியானம்
– யோகம் போன்றவற்றில் ஈடுபாடு உடை யவர்கள். தீர்த்த
யாத்திரைகள் மேற் கொள் வதில் விருப்பம் அதிகம். இமாலய
யாத்தி ரை போன்ற கடினமான பயணங்களை மகிழ்வாக மேற் கொள்வதுண்டு செல்வ மும், செல்வாக்கும்
உடையவர்களே என்பதுடன் நல்ல குணம், உதவும்
மனப்பான்மையு டைய வர்கள் எனலாம்.
17. வியதீபாதம் (விய
யோகம்):-
இது அசுபமான யோகமாகும். இதில்
பிறந்தவர்கள் சுயநலவாதி களாக இருப்பார்கள். துன்பங்களை
யும், துயரங்களையும்,
கஷ்டங்களை யும் அடிக்கடி சந்திக்க வேண்டிவரும். வாழ்க்கை
போ ராட்டமாக இருக்கும். சிந்தித்து,
முன்யோசனையுடன் செயல் படாமல் அவசர முடிவால் பிரச்சி னைகள் சந்திப்பார்கள். பிடிவாத
குணம் உடையவர்கள் என்பதா ல் பல நல்ல வாய்ப்புகளை இழந்து விடு வார்கள். செயல்பாட்டு
உறுதியும், திற
னும் இருப்பதில்லை.
18. வரீயான் (வரீ யோகம்):-
இது சுபயோகமாகும். இதில்
பிறந்தவர்கள் தலைமை தாங்கும் தகுதி யுடையவர்களாக இருப்பார் கள். நல்ல
தைரியமும் காரிய வெற்றியும் உடைய வர்கள். பிறரு
க்கு உதவும் மனப் பான்மையுடையவர். தரும
காரியங்கள் திருப் பணிகள் செய்வ தில் நாட்டமிருக்கும் புகழ் பெறக் கூடிய வகையில் செயல்பாடுகள் இருக்கும். நல்
லெண்ணம் நல் வாக்கு உடையவர்களாக இருப்பார்கள.
19. பரிகம் (பரி யோகம்):-
இது சுபமான யோகமாகும். இதில்
பிறந்தவர்கள் தனக்கென தனியான கொள்கையும், குறிக்கோளும்
உடையவர்கள். அநேகமாக
அதிலிருந்து மாற மாட்டார்கள். கொடுத்த
வாக்கை காப்பாற்றுவார்கள். பிறர்
வாக்கு தவறி னால் கோபம் கொண்டு அவர்களின் தொடர்பை வெட்டிக் கொள்வார்கள். கடும்
முயற்சியு டையவர்கள். வெற்றி
காணும் வரை ஓயமாட்டார்கள். விளையாட்டு
களில், பொழுதுபோக்குகளில்
ஆர்வமுள் ளவர் கள். சுற்றுப்
பயணத்தை விரும்புவார்கள்.
20. சிவம் (சிவ யோகம்):-
இதுவும் சுபமான யோகம் தான். இதில்
பிறந்தவர்கள் சிவனை வழி படுபவர்களாகவும், தியான
ம், யோகம்,
பக்தி, ஞான
மார்க் கத்தில் அதிக ஈடுபாடுடையவர் களாக இருப்பார்கள். ஞானிகள்,
மகான்கள், யோகிகள்,
பெரியோர் களை சந்திப்பதில் அதிக ஆர்வ முடையவர்கள். அவர்க
ளின் ஆசியும் வழிகாட்டுதலும் இவர்க ளுக்கு கிடைக்கும் தெய்வ காரிய ங்கள், திருப்
பணிகள், தீர்த்த
யாத்திரைகள் போன்றவ ற்றில் அதிக நாட்டமிருக்கும் நல்ல எண்ணமும், நல்ல
செயல்பாடும் உடையவர்கள் எனலாம்.
21. சித்தம் (சித் யோகம்):-
இது சுபமானயோகமாகும். இதில்
பிறந்தவர்கள். அசாத்தியமான
மன உறுதியுடையவர்கள். எதற்கு
மே அஞ்சமாட்டார்கள். உறுதியான
சித்த முடையவர்கள். எடுக்கும்
முடிவுக ளை சட்டென்று மாற்றிக் கொள்ள மாட்டார்கள். சாஸ்திர
புலமை, பரிச்சி
யமுடை யவர்கள். நல்ல
பக்தியும் இருக்கும். பிறருக்கு
உதவும் மனப் பான்மையும் இருக்கும். பிறருக்குத்
தகுந்த ஆலோசனைகளைச் சொல்ல கூடியவர்க ளாக இருப்பார்கள்.
22. சாத்தியம் (சாத்
யோகம்):-
இது சுபமான யோகமாகும். பெயரே
சாத்தியம் என்று உள்ளதால், இந்த
யோகத்தில் பிறந்தவர் கள் எதையுமே சாத்தியமாக்கி விடு வார்கள். பிற
பெண்களை வசியம் செய்து கொள்ளும் சாத்தியம் கூட இவர்களுக்கு உண்டு. சற்று
கூடுத லான காம இச்சை உடையவர்கள் என்பதில் காமக்கலையில் வல்லவராக வும் கூட இருப்பதுண்டு. வேடிக்
கையாகவும், நகைச்சுவையாக
வும் பேசுவதில் கெட்டிகாரர்கள். இந்த
பேச்சினாலேயே மற்றவர் களைக் கவர்ந்துவிடுவார்கள். சங்கீத
ஞானமும் இருப்பதுண்டு.
23. சுபம் (சுப யோகம்):-
பெயரே சுபம் என்பதால் சுபமான யோகம் தான். இனிமையான
மென்மையான சுபாவம் கொண்டவர் கள். மகான்கள்,
யோகிகள், ஞானிகள்,
பெரியோர்களுக்கு சேவை செய்வதில் விருப்பம் உடையவர்கள். தெய்வ
காரி யங்கள், திருப்பணிகள்,
பொது சேவை யிலும் நல்ல நாட்டமிருக்கும். அனை
த்து தரப்பினரிடமும், சுமுகமான
உறவு வைத்துக் கொள்பவர்கள். அமைதியை
நாடும் சாத்வீகமானவர்கள் எனலாம்.
24. சுப்பிரம் (சுப்
யோகம்):-
இது சுபமான யோகமாகும். நல்ல
தெய்வபக்தியும், தெய்வ
நம்பிக் கையும் உடையவர்கள். எது
நடந்தாலும் அது கடவுள் செயல் என்று கூறுவார்கள். அனைத்து
க்குமே இவர்களுக்கு கடவுள் தான். தான்
எந்த சாதனை செய்தாலும் தன்னைப் பற்றி பெருமையாக தம்பட்டம் அடித் துக் கொள்ள மாட்டார்கள். அதையும்
கடவுளுக்கே சமர்ப் பணம் செய்வார்கள். மன
உறுதி யும், வைராக்கியமும்
உடைய சாதனையாளர்கள். பிறருக்கு
உதவும் மனப்பான்மையும் இருக்கு ம். நல்ல
தோற்றம். இனிமையான
சுபாவம் உள்ளவர்கள்.
25. பிராம்மியம் (பிரா
யோகம்):-
இதுவும் சுபமான யோகம் தான். தியானம்,
யோகம் ஆகியவற்றில் நல்ல அளவில் ஈடுபாடுடையவர் கள். பிரம்ம
ஞானம் அறியும் முயற் சியுடையவர்கள். ஞானிகள்,
யோகி கள், மகான்களின்
தொடர் புகளை ஏற்படுத்திக் கொண்டு அதன்மூலம் நல்ல அளவில் பயன் பெறுவார் கள். விவேகத்துடன்
செயல்படுவ துடன் தியாக உணர்வும், தரும
சிந்தனை யும் இருக்கும். சிலர்
உபாசனை மேற்கொள்வது முண்டு. உடல்
ஷேமத்தை விரும்புபவர் களாக இருப்பதால் ஹோமம், யாகம்,
சமாராதனை, அன்னதானம்
போன்ற வைகளை செய்யக் கூடியவர்கள் எனலாம்.
26. ஐந்திரம் (ஐந்
யோகம்):-
இதுவும் சுபமான யோகம் தான். இதை
சிலர் மாகேந்திரம் என்ற பெயரிலும் குறிப்பிடுவதுண்டு. இந்த
யோகத் தில் பிறந்தவர்கள் காரிய வெற்றியுடையவர் கள். தீர்க்கதரிசிகள்
எனலாம். ஆழ்ந்து
சிந்தனை செய் பவர்கள். வரும்
பொருள் உரைப்பவர்கள். சிலர்
அருள்வாக்கு, ஜோதிடம்
போன்றவையும் கூட இவர்களுக்கு வரு வதுண்டு. நல்ல
நுணுக்க மான அறிவுள்ளவர்கள். புகழ்ச்சியை
விரும்புவா ர்கள். முன்கோபம்
இருக்கும். கற்றறிந்த
பண்டி தர்களையும், வேதஞானிகளையும்
மதிப்பவர்கள். நல்ல
தெய்வ பக்தி யுடையவர் கள். தெய்வ
காரியங்களை செய்வார்கள்.
27. வைதிருதி (வை
யோகம்):-
இது அசுபமான யோகமாகும்.இதில் பிறந்தவர்கள் சுயநலவாதி களாக இருப்பார்கள். தற்பெருமை
யும் உடையவர்கள். கலகப்
பிரியர் கள். சும்மா
இருக்கும் சங்கை ஊதிக் கொடுப்பவர்கள். நல்லவர்
கள் போல் நடித்து ஆதாயம் பெறு வார்கள். கபடம்
உள்ளதுடன், கெடுக்கும்
புத்தி இருக்கும். மன
உறுதி இல்லாத வர்கள் என்பதால் மறைமுகமான தொல்லைகளை அளிப்பார் கள். நேர்மை
இருக் காது.
கடவுள் பக்தியைக்கூட வியாபார மாக்கி காசு பண்ணி விடுவார்கள். ஆதாயம்
இல்லாம ல் எதையுமே செய்யமாட்டார்கள். கஞ்சத்தனமும்
இருக்கும். காம
உணர்வு அதிகமுடையவர்கள், தீய
பழக்கங்கள் இருக்கும்.
குறிப்பு:
27 யோகங்களின் பொதுவான பலன் தான் ஜாதக அமைப்புப்படி கிரகங்களின் நிலைகளின்படி குணாதி சியங்கள் மாறக்கூடும் என்ற போதிலு ம் இதில் உள்ள அடிப்படை ஒன்றிரண் டு அவர்களிடம் இருக்கவே செய்யும். நட்சத்திரங்களின்,
திதிகளின், குணாதிச
யங்களோடு, யோகங்களில்
பிறந்த பல னும் இணைந்து காணக் கூடும்.
No comments:
Post a Comment